1. Home
  2. தமிழ்நாடு

அதிர்ச்சி! பிரபல நடிகை தூக்கிட்டு தற்கொலை!!

அதிர்ச்சி! பிரபல நடிகை தூக்கிட்டு தற்கொலை!!

நேற்று இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்ட நடிகை இன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அண்மைக்காலமாக திரைப்பட நடிகைகள் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்து வருகிறது. அந்த வகையில் தற்போது போஜ்புரி நடிகை அகன்ஷா தற்கொலை செய்து கொண்டிருப்பது அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

நடிகை அகன்ஷா துபே புதிய படத்தின் படப்பிடிப்பிற்காக உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி சென்றிருந்தார். படப்பிடிப்பு முடிந்ததும், நடிகை அகன்ஷா அங்குள்ள ஹோட்டலுக்குச் சென்றார்.




அதன்பின்னர் அவர் ஹோட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. தகவல் அறிந்த போலீசார், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

அகன்ஷா துபே 17 வயதில் ‛மேரி ஜங் மேரா பைஸ்லா' படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் இசை ஆல்பங்களையும் வெளியிட்டுள்ளார். நேற்றிரவு வரை சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருந்த அகன்ஷா, திடீரென தற்கொலை செய்துக்கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


அதிர்ச்சி! பிரபல நடிகை தூக்கிட்டு தற்கொலை!!


நடிகையின் மரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், முதற்கட்ட விசாரணையில் இது தற்கொலை என தெரியவந்துள்ளது. ஆனாலும், போலீஸார் தொடர்ந்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

newstm.in

Trending News

Latest News

You May Like