1. Home
  2. தமிழ்நாடு

எலான் மஸ்கிற்கு நடிகை ஐஷ்வர்யா ராஜேஷ் கோரிக்கை!!

எலான் மஸ்கிற்கு நடிகை ஐஷ்வர்யா ராஜேஷ் கோரிக்கை!!

ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளதால், நடிகை ஐஷ்வர்யா ராஜேஷ், அந்நிறுவனத்தின் சிஇஓ எலான் மஸ்கிற்கு கோரிக்கை செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார்.

கடந்த 24ஆம் தேதி ஐஷ்வர்யா ராஜேஷின் ட்விட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டது. இதனை நடிகையின் பி.ஆர்.ஓ யுவராஜ், ரசிகர்களுடன் பகிர்ந்துக் கொண்டார். இந்த பிரச்னை விரைவில் தீர்க்கப்படும் என்றார்.


எலான் மஸ்கிற்கு நடிகை ஐஷ்வர்யா ராஜேஷ் கோரிக்கை!!

அதுவரை ரசிகர்கள் மற்றும் அவரை பின்தொடர்பவர்கள் அவரது கணக்கில் பதிவிடப்பட்டுள்ளதை கவனிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். மேலும் எலான் மஸ்க்கைக் குறிப்பிட்டு மற்றொரு ட்வீட்டி பதிவிட்டிருந்தார்.

அதில், அன்புள்ள திரு எலோன் மஸ்க், நான் இந்தியாவிலும் வெளிநாட்டிலும் அதிக ரசிகர்களைக் கொண்ட தென்னிந்திய நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் விளம்பரதாரர். ஐஸ்வர்யா ராஜேஷின் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளது.


எலான் மஸ்கிற்கு நடிகை ஐஷ்வர்யா ராஜேஷ் கோரிக்கை!!


இந்த சிக்கலைத் தீர்க்க உங்கள் குழுவின் உடனடி உதவியை நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்று குறிப்பிட்டிருந்தார். ஆனால் இதுவரை ட்விட்டர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது.


newstm.in

Trending News

Latest News

You May Like