1. Home
  2. தமிழ்நாடு

குட் நியூஸ்! மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு!!

குட் நியூஸ்! மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 4 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.

டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து 38 சதவீதமாக இருந்த மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 4 சதவீதமாக அதிகரித்துள்ளது.

ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் ஆண்டுதோறும் அகவிலைப்படி திருத்தம் செய்யப்படும். அந்த வகையில் வரும் ஜூலை மாதம் இந்த புதிய திருத்தம் கொண்டுவரப்படும்.


குட் நியூஸ்! மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு!!

இந்த மாற்றம் தற்போது பணியில் இருப்பவர்கள் மற்றும் ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியர்களுக்கு பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அகவிலைப்படி உயர்வானது ஜனவரி 1, 2023 முதல் கணக்கீடு கொள்ளப்பட்டு அமலுக்கு வரும்.

விலைவாசி உயர்வை ஈடுகட்ட ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படு வழங்கப்படுகிறது. தற்போது ஒரு கோடிக்கும் அதிகமான மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் 42 சதவீத அகவிலைப்படியைப் பெற உள்ளனர்.

newstm.in

Trending News

Latest News

You May Like