1. Home
  2. தமிழ்நாடு

பிரபல தமிழ் நடிகைக்கு பிடிவாரண்ட்..!!

பிரபல தமிழ் நடிகைக்கு பிடிவாரண்ட்..!!

இருட்டு அறையில் முரட்டுக்குத்து, நோட்டா, ஜாம்பி உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். மேலும் இவர் சமூகவலைதளங்களில் இன்ஸ்டாகிராம், டிக் டாக், ரீல்ஸ்கள் செய்து பிரபலமான காரணத்தினால் , நடிகர் கமல் தொகுத்து வழங்கும் பிரபல நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

பிரபல தமிழ் நடிகைக்கு பிடிவாரண்ட்..!!

ஐதராபாத்தை சேர்ந்த யாஷிகா ஆனந்த்தின் தோழி வள்ளிசெட்டி பவனி (28) கடந்த 2021ம் ஆண்டு ஜூலை மாதம் சென்னை வந்திருந்த பொழுது நண்பர்களுடன் சேர்ந்து அவுட்டிங் சென்று விட்டு திரும்பி வந்த பொழுது மாமல்லபுரம் அருகே சூளேரிக்காடு என்ற இடத்தில் திடீரென நிலை தடுமாறி சாலையின் நடுவில் உள்ள தடுப்புச்சுவரில் கார் மோதியது. பின்னர் நடுரோட்டில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அவரது நண்பரான ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பவனி செட்டி உயிரிழந்தார்.

இது தொடர்பாக மாமல்லபுரம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து இந்த வழக்கின் மீதான விசாரணை செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. கடந்த ஒரு வருடமாக நடைபெற்று வரும் இந்த வழக்கில் நேற்று முன்தினம் யாஷிகா ஆனந்த் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும். ஆனால் யாஷிகா ஆஜராகாததால் அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மேலும் வரும் ஏப்ரல் 25ஆம் தேதிக்குள் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்து வந்தால் காவல்துறையினர் கைது நடவடிக்கையில் ஈடுபடலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like