1. Home
  2. விளையாட்டு

மருத்துவமனையில் பிரபல கிரிக்கெட் வீரர் ..!!

மருத்துவமனையில் பிரபல கிரிக்கெட் வீரர் ..!!

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான வரலாற்று சிறப்புமிக்க கவாஸ்கர் பார்டர் டெஸ்ட் தொடர் நடைபெற்று முடிந்திருக்கிறது. நான்கு போட்டிகளைக் கொண்ட இந்தத் தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியிருந்தது. இந்திய அணியில் நீண்ட காலத்திற்கு பிறகு உள்ளே வந்திருந்த ஷ்ரேயாஸ் அய்யர் நான்காவது போட்டியில் காயமடைந்தார். இதனையடுத்து அவர் பேட்டிங் செய்யாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில்,ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியின்போது ஷ்ரேயஸ் ஐயருக்கு முதுகு பகுதியில் வலி ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து போட்டியின் நடுவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்தும் அவர் விலகிவிட்டார்.

ஷ்ரேயாஸ் அய்யருக்கு முதுகு பகுதியில் ஏற்பட்ட காயத்திற்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரை செய்திருக்கின்றனர். இதனையடுத்து, ஷ்ரேயாஸ் அய்யர் அடுத்த 5 மாதங்களுக்கு ஓய்வில் இருப்பார் என தெரிகிறது. இதன் காரணமாக வரவிருக்கும் உலகக்கோப்பை, டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர், ஐபிஎல் ஆகிய தொடரில் ஷ்ரேயாஸ் அய்யர் விளையாடுவது கேள்விக்குறியாகி உள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஐஸ்பிரிட் பும்ரா காயம் காரணமாக அணியில் இருந்து நீண்ட நாட்களாக விலகி இருக்கிறார். சமீபத்தில் அவருக்கு நியூசிலாந்தில் அவருக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றிருந்தது. உலகக் கோப்பைக்குள் பும்ரா மீண்டு வருவாரா? என ரசிகர்களிடையே கேள்வி எழுந்த நிலையில் தற்போது ஷ்ரேயாஸ் அய்யருக்கு அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் பரிந்துரை செய்திருப்பது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்திருக்கிறது.

Trending News

Latest News

You May Like