1. Home
  2. தமிழ்நாடு

ஆன்லைன் ரம்மி தடைச்சட்ட மசோதா நாளை மீண்டும் தாக்கல்!!

ஆன்லைன் ரம்மி தடைச்சட்ட மசோதா நாளை மீண்டும் தாக்கல்!!

ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதா நாளை சட்டப் பேரவையில் மீண்டும் தாக்கல் செய்யப்படுகிறது.

அவசர சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் கொடுத்ததை அடுத்து, கடந்த ஆண்டு அக்டோபர் 19-ம் தேதி சட்டப்பேரவையில், ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை விதிக்கும் மசோதா நிறைவேற்றப்பட்டு, ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

இது தொடர்பாக ஆளுநர் கேட்ட விளக்கங்களுக்கு தமிழக அரசு பதில் அளித்தது. அதைத்தொடர்ந்து மசோதாவை கிடப்பில் போட்டு வைத்திருந்த நிலையில், கடந்த 8-ம் தேதி ஆளுநர் திருப்பி அனுப்பினார்.


ஆன்லைன் ரம்மி தடைச்சட்ட மசோதா நாளை மீண்டும் தாக்கல்!!

இந்த மசோதாவை நிறைவேற்ற தமிழக சட்டப்பேரவைக்கு அதிகாரம் இல்லை என்று அவர் குறிப்பிட்டிருந்தார். ஆனால் ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்யும் சட்டத்தை நிறைவேற்ற, தமிழக சட்டப்பேரவைக்கு அதிகாரம் உள்ளது என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி உறுதிபட தெரிவித்தார்.

கூட்டத்தொடரில் மீண்டும் மசோதாவை நிறைவேற்றி, ஆளுநருக்கு அனுப்புவோம், இரண்டாவது முறையாக அனுப்பும்போது, அதை ஆளுநர் நிராகரிக்க வாய்ப்பில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

இந்நிலையில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா நாளை சட்டப்பேரவையில் மீண்டும் தாக்கல் செய்யப்படுகிறது. ஆளுநர் எழுப்பிய கேள்விகள் மற்றும் அரசு அளித்த பதில்களை பேரவையில் தமிழக அரசு விளக்க முடிவு செய்துள்ளது.

newstm.in

Trending News

Latest News

You May Like