1. Home
  2. தமிழ்நாடு

ஆம்புலன்சில் படுத்தபடியே பொதுத்தேர்வு எழுதிய மாணவி!!

ஆம்புலன்சில் படுத்தபடியே பொதுத்தேர்வு எழுதிய மாணவி!!

விபத்தில் கால் எலும்பு முறிந்த போதும், மாணவி ஒருவர் 10ஆம் தேதி பொதுத்தேர்வு எழுதி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த, முபாஷிரா சையத் என்ற 10ஆம் மாணவி, கடந்த வெள்ளிக்கிழமை தேர்வு முடித்துவிட்டு வீடு திரும்புகையில் சாலையை கடக்க முயற்சி செய்தார். அப்போது கார் ஒன்று முபாஷிராவின் இடது கால் மீது ஏறி இறங்கியது.

இதில் எலும்பு முறிவு ஏற்பட்டதால், மாணவியை இரண்டுவாரம் ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தினர். ஆனால் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்று வருவதால் அந்த மாணவி ஓய்வு எடுக்க முடியாத சூழலில் இருந்தார்.


ஆம்புலன்சில் படுத்தபடியே பொதுத்தேர்வு எழுதிய மாணவி!!


இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை நடந்த தேர்வில் பங்கேற்க விரும்பிய மாணவிக்கு பிரத்யேகமாக ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்யப்பட்டது. ஆம்புலன்சில் படுத்தபடியே மாணவி பதில் கூற, உதவியாளர் ஒருவர் தேர்வை எழுதினார்.

மாணவியின் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். எதிர்காலத்தில் தாம் ஆசிரியையாக விரும்புவதாகவும் விபத்தில் சிக்கிய மாணவி முபாஷிரா தெரிவித்துள்ளார்.

newstm.in

Trending News

Latest News

You May Like