1. Home
  2. தமிழ்நாடு

எம்.எல்.ஏவின் வெற்றி செல்லாது என்று நீதிமன்றம் அதிரடி!!

எம்.எல்.ஏவின் வெற்றி செல்லாது என்று நீதிமன்றம் அதிரடி!!

போலி சான்றிதழ் தொடர்பான புகாரில் எம்.எல்.ஏ ராஜா என்பவரின் வெற்றி செல்லாது என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கேரளாவில் 2021இல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் மார்க்சிஸ் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தேவிக்குளம் தொகுதியில் ராஜா என்பவர் போட்டியிட்டார். இவர் 7,848 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.

சட்டமன்றத்தில் இவர் தமிழில் பதவி பிரமாணம் எடுத்தது தமிழ்நாட்டில் கவனத்தை பெற்றது. இந்நிலையில், கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த இவர் பட்டியலின சமூகத்துக்கு ஒதுக்கப்பட்ட தனி தொகுதியில் வெற்றிபெற்றது செல்லாது என தோல்வியைத் தழுவிய டி. குமார் உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.


எம்.எல்.ஏவின் வெற்றி செல்லாது என்று நீதிமன்றம் அதிரடி!!

ராஜா தேவாலயத்தில் ஞானஸ்நானம் எடுத்ததாகவும், அவர் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதை நிரூபிக்க போலி சான்றிதழை சமர்ப்பித்ததாகவும் மனுவில் குறிப்பிட்டிருந்தார். ராஜாவின் திருமணம் தேவாலயத்தில் நடந்ததாகவும் குற்றச்சாட்டை முன்வைத்தார்.

இதனை விசாரித்த நீதிமன்றம் ராஜா சட்டமன்ற உறுப்பினரானது செல்லாது என்றும், கிறிஸ்துவ மதத்திற்கு மாறிய அவருக்கு வழங்கிய சாதி சான்றிதழ் செல்லாது என்றும் அதிரடியாக கருத்து தெரிவித்துள்ளது.

இந்த வழக்கு கேரளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேவிகுளம் தொகுதியில் கிட்டத்தட்ட 62% தமிழர்கள் வசித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

Trending News

Latest News

You May Like