1. Home
  2. தமிழ்நாடு

மது கொடுத்து ரயிலில் பெண் பாலியல் வன்கொடுமை!!


மது கொடுத்து ராஜதானி ரயிலில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட புகாரில் ராணுவ வீரர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கேரள மாநிலம் பத்தனம்திட்டா பகுதியை சேர்ந்த பிரதீஷ்குமார் என்பவர் ஜம்மு காஷ்மீரில் எல்லை பாதுகாப்பு படை பிரிவில் பணியாற்றி வருகிறார். இவர் விடுமுறைக்காக ராஜதானி எக்ஸ்பிரஸ் ரயிலில் கேரளா திரும்பிக்கொண்டிருந்தார்.

அதே ரயிலில் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவி ஒருவரும் பயணித்துள்ளார். ஒரே மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இருவரும் பேசிக்கொண்டு வந்துள்ளனர்.


மது கொடுத்து ரயிலில் பெண் பாலியல் வன்கொடுமை!!


ரயில் எர்ணாகுளத்துக்கும் ஆலப்புழாவுக்கும் இடையில் சென்றுகொண்டிருந்தபோது அவர் அந்தப் பெண்ணுக்கு வலுக்கட்டாயமாக மதுவை கொடுத்துள்ளார். இதையடுத்து அந்த பெண் சுயநினைவை இழந்தார்.

அப்போது அந்த ராணுவ வீரர் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். நினைவு திரும்பிய பின்னர் வன்கொடுமைக்கு உள்ளானதை உணர்ந்த அப்பெண் தனது கணவரிடம் இதுகுறித்து கூறியுள்ளார்.


மது கொடுத்து ரயிலில் பெண் பாலியல் வன்கொடுமை!!

பின்னர் ரயில் திருவனந்தபுரத்தை அடைந்ததும் இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் பிரதீஷ்குமாரை போலிஸார் கைது செய்தனர்.

பிரதீஷ்குமார் தன் மீதான புகாரை மறுத்துள்ள நிலையில், இளைஞர் ஒருவர் எடுத்த வீடியோவின் அடிப்படையில் பிரதீஷ்குமார் குற்றவாளியாக இருக்கக்கூடும் என போலீஸார் கூறியுள்ளனர். இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

newstm.in

Trending News

Latest News

You May Like