எங்கள் கடற்பரப்பில் ஒரு நிமிடம் கூட தமிழக மீனவர்களுக்கு அனுமதி இல்லை..!
இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வடமராட்சி வடக்கு மற்றும் கிழக்கு மீனவர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார். அப்போது மீனவர்களின் பிரச்சனைகள் குறித்து கேட்டறிந்த அவர், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
இலங்கை கடற்பரப்பில் ஒரு நிமிடம் கூட தமிழக மீனவர்கள் மீன்பிடிக்க அனுமதி கிடையாது. பாஸ் நடைமுறையும் இல்லை. தமிழக மீனவர்களின் அத்துமீறல்கள் குறித்து இந்திய வெளிவிவகார அமைச்சர் மற்றும் தமிழக பா.ஜ.க. தலைவரிடம் அரசாங்க ரீதியாகவும், நட்பு ரீதியாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மற்றும் இந்திய ஊடகவியலாளர்கள் இங்கே நேரடியாக வந்து செய்திகளை சேகரித்து நிலமைகளை பார்த்து விட்டு செல்லட்டும். அப்போதுதான் இந்தியாவில் உள்ள மக்களுக்கு இலங்கை நிலவரம் புரியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.