1. Home
  2. தமிழ்நாடு

ஈரான் சிறையில் சிறுமிகளுக்கு சித்திரவதை ?

ஈரான் சிறையில் சிறுமிகளுக்கு சித்திரவதை ?

ஈரான் சிறையில் பாலியல் வன்கொடுமை, மின்சார அதிர்ர்ச்சி போன்ற கடுமையான சித்திரவதைகள் சிறுமிகளுக்கு நடந்துள்ளது என மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

ஈரானில் ஹிஜாபிற்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற போராட்டத்தில் ஈடுபட்டவர்களை ஈரான் அரசு கைது செய்துள்ளது. போராட்டக்காரர்கள் சிலருக்கு தூக்கு தண்டனையும் நிறைவேற்றப்பட்டுள்ளது.இந்நிலையில் ஈரான் சிறையில் பாலியல் வன்கொடுமை, மின்சார அதிர்ச்சி போன்ற கடுமையான சித்திரவதைகள் சிறுமிகளுக்கு நடந்துள்ளது என மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் ராணுவத்தினரிடம் சிக்கி சிறையில் அடைக்கப்பட்ட 12 வயது உடைய சிறார்கள் கடுமையான கொடுமைகளை அனுபவித்து வருகின்றனர் என்று கூறப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like