1. Home
  2. தமிழ்நாடு

ஆதார் தரவுகளை மக்களே இலவசமாக புதுப்பித்துக்கொள்ள புதிய ஏற்பாடு..!!

ஆதார் தரவுகளை மக்களே இலவசமாக புதுப்பித்துக்கொள்ள புதிய ஏற்பாடு..!!

பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆதார் தகவல்களை புதுப்பிப்பது கட்டாயம் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில், தற்போது இந்திய தனித்துவ அடையாள ஆணையம் லட்சக்கணக்கான மக்கள் பயன்பெறும் வகையில் இலவசமாக அப்டேட் செய்து கொள்ளும் வசதியை செய்துள்ளது.

அதன்படி, மக்கள் myaadhaar.uidai.gov.in என்ற இணையதளத்தில் தங்கள் ஆதார் எண்ணைப் பயன்படுத்தி OTP நம்பர் மூலமாக தங்களின் தரவுகளை புதுப்பித்துக் கொள்ள முடியும்.

இதுகுறித்து இந்திய தனித்துவ அடையாள ஆணையம் வெளியிட்ட அறிக்கையில், “பொதுமக்கள் தங்கள் ஆதார் தகவல்களை myaadhaar இணையதளம் மூலமாக மார்ச் 15 ஆம் தேதி முதல் ஜூன் 14 ஆம் தேதி வரை இலவசமான முறையில் புதுப்பித்துக் கொள்ள முடியும். பெயர், பிறந்த தேதி, முகவரி போன்ற விவரங்களை மாற்ற வேண்டிய அவசியம் இருந்தால் இதில் புதுப்பித்துக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், ஆதார் சேவை மையங்களில் மேற்கொள்ளப்படும் அப்டேட்களுக்கு வழக்கத்தில் உள்ள கட்டணமான ரூ.50 செலுத்த வேண்டியிருக்கும் என்பதில் மாற்றம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தொலைபேசி எண்ணை மாற்ற விரும்பும் நபர்கள் ஆதார் மையத்திற்கு நேரடியாகச் சென்றுதான் மாற்ற வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like