1. Home
  2. விளையாட்டு

மிக மோசமான தோல்வியை சந்தித்த இந்திய அணி!!

மிக மோசமான தோல்வியை சந்தித்த இந்திய அணி!!

ஆஸ்திரேலியா அணி உடனான இரண்டாது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி மிக மோசமாக தோல்வியை தழுவியுள்ளது.

முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றிருந்த நிலையில், இரண்டாவது போட்டி இன்று ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோகித் சர்மா, சும்பன் கில் ஆகியோர் களமிறங்கினர். கில் முதல் ஓவரிலேயே டக் அவுட் ஆகி ஏமாற்றினார். அதைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவின் அபார பந்து வீச்சை தாக்குபிடிக்க முடியாமல் இந்திய அணி வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறினர்.




கேப்டன் ரோகித் 13 ரன்னிலும், சூர்யகுமார் யாதவ் கடந்த ஆட்டத்தை போல் இந்த ஆட்டத்திலும் முதல் பந்திலேயே அவுட் ஆனார். சற்றி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய கோலி 31 ரன் எடுத்தார். இறுதியில் இந்திய அணி 26 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 117 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.

ஆஸ்திரேலியா தரப்பில் ஸ்டார்க் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதையடுத்து 118 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களமிறங்கியது. தொடக்க ஆட்டக்கார்களான டிராவிஸ் ஹெட், மிட்ஷெல் மார்ஷ் ஆகிய இருவரும் பந்துகளை நாலாபுறமும் சிதறடித்தனர்.




ஆஸ்திரேலியா வெறும் 11 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி, 121 ரன்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் இந்திய ரசிகர்கள் பெரும் சோகத்தில் உள்ளனர். 3ஆவது ஒரு நாள் போட்டி வரும் 22ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது.

newstm.in

Trending News

Latest News

You May Like