1. Home
  2. தமிழ்நாடு

இன்னும் சற்று நேரத்தில் செய்தியாளர்களை சந்திக்கும் ஓபிஎஸ்..!!

இன்னும் சற்று நேரத்தில் செய்தியாளர்களை சந்திக்கும் ஓபிஎஸ்..!!

சட்டமனற்ற தேர்தல் தோல்விக்கு பிறகு திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின்னர், அதிமுகவில் இரட்டை தலைமை பிரச்சனை தொடங்கியது. இந்த இரட்டை தலைமை பிரச்சனை மெல்ல மெல்ல கட்சிக்குள் மாபெரும் பூதாகரமாக வெடித்தது. இதனால் அதிமுகவில் ஓபிஎஸ், இபிஎஸ் ஆகிய இரு அணிகளாக பிரிந்தனர். இபிஎஸ் தான் கட்சியின் தலைமை ஏற்க வேண்டும் என்று ஒரு தரப்பும், ஓபிஎஸ் தான் கட்சிக்கு தலைமை வகிக்க வேண்டும் என்று மற்றொரு தரப்பும் கூறி வருகின்றனர்.

இந்த சமயத்தில், அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் மார்ச் 26ஆம் தேதி நடைபெறும் என அதிமுக தலைமை நேற்று அறிவித்தது.இதற்கான வேட்புமனு தாக்கல் இன்றும் நாளையும் நடைபெறுகிறது. இருப்பினும், எடப்பாடி பழனிசாமி தவிர வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யமாட்டார்கள் என்பதால் அவர் தான் பொதுச்செயலாளராக தேர்வவார் என கூறப்படுகிறது.

இந்த நிலையில், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று காலை 11.30 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கிறார். பசுமையை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் செய்தியாளர்களை சந்திக்க இருப்பதாக ஓபிஎஸ் தெரிவித்ததாக கூறப்படுகிறது. அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஓபிஎஸ் செய்தியாளர்களை சந்திக்க இருக்கிறார்.

Trending News

Latest News

You May Like