1. Home
  2. தமிழ்நாடு

வேட்புமனுவை தாக்கல் செய்தார் எடப்பாடி பழனிசாமி!!

வேட்புமனுவை தாக்கல் செய்தார் எடப்பாடி பழனிசாமி!!

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்தார்.

பல்வேறு பிரச்னைகளுக்கு பிறகு அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல் வரும் 26ஆம் தேதி நடைபெறுகிறது. தொடர் சட்டப்போராட்டம், அதைத் தொடர்ந்து வந்த தீர்ப்புகள் என அதிமுக பரபரப்பாகவே காணப்பட்டது.

இந்நிலையில், ஜூலை 11ஆம் தேதி நடத்தப்பட்ட பொதுக்குழு செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை அடுத்து, எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளராக தொடர்கிறார். ஆனால் ஓபிஎஸ் அணியினர் இது தற்காலிக வெற்றி என்கின்றனர்.


வேட்புமனுவை தாக்கல் செய்தார் எடப்பாடி பழனிசாமி!!


இந்நிலையில்தான் அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் நடத்தும் அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ள நத்தம் விஸ்வநாதன், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோரிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

வரும் 20ஆம் தேதி திங்கட்கிழமை காலை 11 மணிக்கு வேட்புமனு பரிசீலனை நடைபெறும். 21ஆம் தேதி மாலை 3 மணி வரை வேட்புமனுக்களை திரும்பப்பெறலாம். அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் 26ஆம் தேதி நடைபெறுகிறது.


வேட்புமனுவை தாக்கல் செய்தார் எடப்பாடி பழனிசாமி!!


தேர்தலில் பதிவான வாக்குகள் 27ஆம் தேதி திங்கட்கிழமை காலை 9 மணிக்கு எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது. எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து யாரும் வேட்பு மனுவை தாக்கல் செய்ய வாய்ப்பு இல்லை என்பதால் அவர் போட்டியிடின்றி தேர்வாக வாய்ப்பு உள்ளது.

newstm.in

Trending News

Latest News

You May Like