1. Home
  2. தமிழ்நாடு

கலைஞர் கேலரியை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!!

கலைஞர் கேலரியை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!!

சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி பெயர் சூட்டப்பட்ட புதிய கேலரியை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம் 139 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டுள்ளது. அதில், புதிய கேலரிக்கு கலைஞர் பெயரும் சூட்டப்பட்டுள்ளது. இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்தியா சிமெண்ட்ஸ் சீனிவாசன் ஆகியோர் கேலரியை திறந்து வைத்தனர்.


கலைஞர் கேலரியை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!!


இந்த நிகழ்ச்சியில், விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், முன்னாள் இந்திய அணியின் கேப்டனும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான தோனி, வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் பிராவோ ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள முதல்வர், கலைஞருக்கு பிடித்த கிரிக்கெட் வீரரான தோனியின் முன்னிலையில், கலைஞர் ஸ்டாண்டை திறந்து வைத்ததில் பெருமை அடைவதாக குறிப்பிட்டுள்ளார்.


கிரிக்கெட்டின் தீவிர ரசிகராக இருந்த எங்கள் காவியத் தலைவருக்குத் தகுந்த அஞ்சலியாக இதை கருதுகிறேன்" என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

சேப்பாக்கம் மைதானம் புதுப்பிக்கப்பட்ட நிலையில் முதல் போட்டியாக இந்தியா- ஆஸ்திரேலியா மோதும் மூன்றாவது ஒருநாள் போட்டி வரும் 22ஆம் தேதி நடைபெற உள்ளது.

newstm.in

Trending News

Latest News

You May Like