1. Home
  2. தமிழ்நாடு

கழிவறைக்கு செல்லும் போது நர்ஸிங் மாணவிக்கு நடந்த கொடூரம்..!!

கழிவறைக்கு செல்லும் போது நர்ஸிங் மாணவிக்கு நடந்த கொடூரம்..!!

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை அடுத்துவுள்ள ராதாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சுகன். இவருடைய 19 வயது மகள் தரணி, அம்மாவட்டத்திலுள்ள தனியார் செவிலியர் கல்லூரியில் முதலாம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வந்தார். நேற்று காலை வீட்டுக்கு அருகிலிருக்கும் கழிவறைக்கு சென்ற தரணி, திடீரென சத்தம் போட்டு அலறியுள்ளார்.

இதை கேட்ட அக்கம் பக்கத்தினர் மற்றும் குடும்பத்தினர் சத்தம்கேட்ட இடத்துக்கு வரும்போது, கழுத்தறக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் துடித்துக் கிடந்துள்ளார் தரணி. கழுத்தில் காயம் ஆழமாக இருந்ததால், சிறுதி நேரத்திலேயே தரணி இறந்துவிட்டார். உடனடியாக இதுகுறித்து விக்கிரவாண்டி காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து தரணியின் உடலை மீட்டு, விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். அப்போது கிடைத்த முதற்கட்ட தகவலில், தரணி கத்தியால் கழுத்தறக்கப்பட்டு உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது. அதையடுத்து கொலை வழக்குப் பதிவு செய்த காவல்துறை, இந்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணையில் இறங்கியது.

கழிவறைக்கு செல்லும் போது நர்ஸிங் மாணவிக்கு நடந்த கொடூரம்..!!

அதன்மூலம் தரணியும், மதுரபாக்கம் என்கிற கிராமத்தைச் சேர்ந்த கணேசனும் 5 ஆண்டுகள் காதலித்து வந்துள்ளார். சமீபத்தில் நடந்த ஒரு கொலை சம்பவத்தில் கணேசன் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. இதன்மீதான விசாரணை தற்போது நடந்து வருகிறது. இதுகுறித்து இளம்பெண் தரணிக்கு தெரியவந்ததை அடுத்து, கணேசனை விட்டு அவர் விலகியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த கணேசன், நேற்று காலை தரணி வீட்டுக்கு வந்து, அவருடைய தோட்டத்தில் மறைந்துள்ளார். அப்போது தரணி வழக்கம் போல கழிவறைக்கு செல்ல வந்துள்ளார். திடீரென அங்கு வந்த கணேசன், தரணியை பின்னாடி இருந்து தாக்கி, கழுத்தில் கத்தியால் வெட்டியுள்ளான்.

இதை சற்றும் எதிர்பாராத மாணவி, தாக்குதலை தடுக்க முடியாமல் ரத்த வெள்ளத்தில் சரிந்து உயிரிழந்தார். இந்த சம்பவம் நடந்த வெறும் 2 மணிநேரத்தில் இளைஞர் கணேசனை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த சம்பவம் விக்கிரவாண்டி பகுதியில் பலரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Trending News

Latest News

You May Like