1. Home
  2. தமிழ்நாடு

ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் இருவர் பலி!!

ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் இருவர் பலி!!

அருணாச்சல பிரதேசத்தில் பழமையான சீட்டா வகை ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்தனர்.

அருணாச்சல பிரதேச மாநிலம் மண்டலா அருகே இந்திய ராணுவத்தின் சீட்டா வகை ஹெலிகாப்டர் இன்று காலை விபத்துக்குள்ளானது. ஹெலிகாப்டர் போம்டிலா என்ற பகுதி அருகே சென்றுகொண்டிருந்தபோது தொடர்பை இழந்தது.

இன்று காலை 9.15 மணியளவில் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அறையுடன் ஹெலிகாப்டர் தொடர்பை இழந்தது. இதனையடுத்து தேடுதல் குழுக்கள் மூலம் ஹெலிகாப்டரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்றது.


ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் இருவர் பலி!!

கடும் பனிமூட்டம் காரணமாக ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது. இதில் 2 பைலட்டுகள் பயணம் செய்த நிலையில், அவர்கள் இருவரும் உயிரிழந்தது தெரியவந்துள்ளது.

இருவரும் உயிரிழந்ததாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

newstm.in

Trending News

Latest News

You May Like