1. Home
  2. தமிழ்நாடு

பெண்களே உஷார்..!! சீரியல் கில்லர் போல் ஊரில் உலா வரும் சீரியல் கிஸ்ஸர்..!!

பெண்களே உஷார்..!! சீரியல் கில்லர் போல் ஊரில் உலா வரும் சீரியல் கிஸ்ஸர்..!!

பீகார் மாநிலம், ஜமுய் மாவட்டத்தில் இளம்பெண் ஒருவரை மர்ம நபர் ஒருவர் வலுக்கட்டாயமாக முத்தமிடும் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதையடுத்து இந்தச் சம்பவம் குறித்தான தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சம்பவம் கடந்த மார்ச் 10 ஆம் தேதி நடந்ததாகக் கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட அந்தப் பெண் ஜமுய் மாவட்டத்தில் உள்ள சதார் மருத்துவமனையில் பணிபுரிந்து வருகிறார்.சம்பவத்தன்று மர்ம நபர் ஒருவர் மருத்துவமனை சுவர் ஏறி குதித்துள்ளார். அந்தப் பெண் மொபைல் போனில் பேசிக்கொண்டு வந்துள்ளார். அப்போது திடீரென மர்ம மனிதர் அந்தப் பெண்ணை கட்டிப்பிடித்து வலுக்கட்டாயமாக முத்தம் கொடுத்துள்ளார்.

இதையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சீரியல் கில்லர் கேள்விபட்டிருப்போம். ஆனால், அந்த நபர் சீரியல் கிஸ்ஸர். இதுபோன்று அடிக்கடி பெண்களுக்கு முத்தம் கொடுப்பதாகக் புகார்கள் வந்திருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.



Trending News

Latest News

You May Like