1. Home
  2. சினிமா

காதல் தோல்வியால் கதறி அழுத பிரபல நடிகை!!

காதல் தோல்வியால் கதறி அழுத பிரபல நடிகை!!

காதல் தோல்வியை நினைத்து தாம் பலமுறை அழுததாக பிரபல நடிகை கூறியிருப்பது தற்போது வைரலாகி வருகிறது.

மீசையை முருக்கு படம் மூலம் அறிமுகமான நடிகை ஆத்மிகா, அதனைத் தொடர்ந்து கோடியில் ஒருவன், காட்டேரி போன்ற படங்களில் நடித்து பிரபலமானார். தற்போது இவர் உதநிதி ஸ்டாலினுடன் நடித்துள்ள கண்ணை நம்பாதே திரைப்படம் மார்ச் 17ஆம் தேதி திரைக்கு வருகிறது.

இந்த படத்தில் ஸ்ரீகாந்த், பிரசன்னா, சதீஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 'இரவுக்கு ஆயிரம் கண்கள்' படத்தை இயக்கிய இயக்குநர் மு.மாறன் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். சித்து குமார் இசையமைத்துள்ளார்.


காதல் தோல்வியால் கதறி அழுத பிரபல நடிகை!!


ஏற்கெனவே படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் நடிகை ஆத்மிகா தனக்கு காதல் தோல்வி ஏற்பட்டுள்ளது என கூறியுள்ளார்.

காதல் தோல்வியால் இரவெல்லாம் அழுததாகவும், நான் பிரேக் அப் பண்ணவில்லை. என்னை காதலித்தவர்தான் பிரேக் அப் செய்தார். ஆனால் அதற்காக தற்போது மகிழ்ச்சியடைகிறேன் என்று நடிகை ஆத்மிகா தெரிவித்துள்ளார்.


காதல் தோல்வியால் கதறி அழுத பிரபல நடிகை!!


எனக்கு சாதரணமான நல்ல மனிதராக இருந்தால் போதும். பணமா புகழா முக்கியமென்றால் பணம்தான் முக்கியமென்பேன், ஏனெனில் அதுதான் எதார்த்தம் என்று அவர் கூறியுள்ளார்.

newstm.in

Trending News

Latest News

You May Like