1. Home
  2. தமிழ்நாடு

பூரி கடற்கரையில் பெண்களை போற்றும் அழகிய மணற்சிற்பம்..!!

பூரி கடற்கரையில் பெண்களை போற்றும் அழகிய மணற்சிற்பம்..!!

மார்ச் 8-ம் தேதியான நேற்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், சுதர்சன் பட்நாயக் இந்த சிற்பத்தை வடிவமைத்துள்ளார். குழந்தையை அரவணைக்கும் தாயாக, மருத்துவராக, காவல் துறை அதிகாரியாக, ராணுவ வீராங்கனையாக என பல்துறையில் பெண்களின் பங்களிப்பை போற்றும் வகையில் இந்த சிலையை அவர் வடிவமைத்துள்ளார். அனைத்து பெண்களையும் வணங்குவதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், வண்ணங்களின் திருவிழாவான ஹோலி பண்டிகையை குறிப்பிடும் வகையில் இதில் பல்வேறு வண்ணங்களை அவர் சேர்த்துள்ளார்.

“அனைவருக்கும் எனது வாழ்த்துகள். உலகில் அன்னையின் சக்தி மற்றும் தேசத்தைக் கட்டியெழுப்புவதில் அவர்களது பங்களிப்பு எப்போதும் முதன்மையானது. வாருங்கள், பெண்களின் சக்தியை மதிக்கவும், பாதுகாக்கவும், அதிகாரமளிக்கவும் நாம் அனைவரும் உறுதி ஏற்போம்” என அவர் ட்வீட் செய்துள்ளார்.




Trending News

Latest News

You May Like