1. Home
  2. தமிழ்நாடு

அடுத்த அதிரடி! இனி இதற்கும் அபராதம் கட்ட வேண்டும்!!

அடுத்த அதிரடி! இனி இதற்கும் அபராதம் கட்ட வேண்டும்!!

சாலை விதிகளை மீறுபவர்கள் மீது தமிழ்நாடு போக்குவரத்து காவல்துறையினர் அதிரடி நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். இந்நிலையில், அடுத்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஏற்கனவே சாலை விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம் உயர்த்தப்பட்டது. அதைத் தொடர்ந்து தற்போது விதிகளை மீறி பொருத்தப்பட்டுள்ள நம்பர் பிளேட்டுகளை அகற்றி போக்குவரத்து காவல்துறையினர் அபராதம் விதித்து வருகின்றனர்.

சென்னை முழுவதும் பார்க்கிங்கில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் நம்பர் பிளேட்டுகள் விதிகள் மீறி வைக்கப்பட்டிருந்தால் அபராத சலான் ஒட்டப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுகிறது.


அடுத்த அதிரடி! இனி இதற்கும் அபராதம் கட்ட வேண்டும்!!


இந்நிலையில், தற்போது ஸ்டாப்லைன் கோட்டைத்தாண்டினால் ரூ.500 அபராதம் விதிக்கும் நடவடிக்கையை சென்னை போலீசார் தொடங்கியுள்ளனர். இதற்கான சென்னை முழுவதும் 287 இடங்களில் விழிப்புணர்வு கூட்டங்களையும் போலீசார் நடத்தினர்.

இதனால் வாகன ஓட்டிகள் இனி விதிகளை மீறுவது என்பது சாத்தியே இல்லை. எல்லாவற்றிற்கும் செக் வைக்கும் வகையில் போக்குவரத்து போலீஸார் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

newstm.in

Trending News

Latest News

You May Like