1. Home
  2. தமிழ்நாடு

கடன் தொல்லையால் மனைவி, குழந்தைகளை குத்திக் கொன்ற நபர்!!

கடன் தொல்லையால் மனைவி, குழந்தைகளை குத்திக் கொன்ற நபர்!!

கொரோனா முடக்கத்தால் ஏற்பட்ட கடன் தொல்லையால் டெல்லியில் மனைவி மற்றும் குழந்தைகளை கொலை செய்துவிட்டு, தற்கொலைக்கு முயற்சித்த நபரின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி மோகன் கார்டன் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் (38) என்பவருக்கு சுனிதா என்ற மனைவியும் இரண்டு ஆண் குழந்தைகளும் இருந்தனர். ஒரு மகனுக்கு 5 வயது. மற்றொன்று 4 மாத குழந்தை. ராஜேஷ் ஐஎஸ்ஓ தரச் சான்று வழங்கு நிறுவனத்தை நடத்தி வந்த நிலையில், கொரோனா காலத்தில் கடும் நெருக்கடியை சந்தித்தார்.

இந்நிலையில் நேற்று பிற்பகல் மனைவி மற்றும் குழந்தைகளை அவர் கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தனது மணிக்கட்டையும் அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றார். அதற்கு முன்பாக அவர் நண்பர்களுக்கு வாட்ஸ் அப்பில் நீண்ட பதிவு ஒன்றை அனுப்பியிருந்தார்.


கடன் தொல்லையால் மனைவி, குழந்தைகளை குத்திக் கொன்ற நபர்!!

அதிர்ச்சி அடைந்த ராஜேஷின் நண்பர்கள், அவரது சகோதரருக்கு தகவல் அளித்தனர். வீட்டிற்கு சென்ற பார்த்தபோது மூவர் இறந்துவிட்டனர். ராஜேஷ் மட்டும் உயிருக்கு போராடியபடி கிடந்தார். அவரை மீட்டு மருத்துமனையில் சேர்த்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவம் தொடர்பாக போலீஸார் கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

Trending News

Latest News

You May Like