திருமணத்திற்கு வரவேண்டாம் என்று குறிப்பிட்டு பத்திரிகை!!
குஜராத்தில் திருமண பத்திரிகை ஒன்று வித்தியாசமாக அச்சடிக்கப்பட்டிருப்பது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இப்போதெல்லாம் ரொம்ப கிரியேட்டிவாக திருமண பத்திரிகைகள் அச்சடிக்கப்படுகின்றன. அந்த வகையில், குஜராத்தில் அச்சடிக்கப்பட்ட திருமண பத்திரிகை ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
ராஜ்கோட்டில் ஹதாலா என்ற பகுதியைச் சேர்ந்த மன்சுக் சீதாபரா என்பவர் தனது மகள் பிரியாவுக்கும், கல்பேஷ் என்ற நபருக்கு திருமணம் நிச்சயம் செய்துள்ளார். சமீபத்தில் இந்த கிராமத்தில் நடைபெற்ற திருமண நிகழ்வில் பலர் குடித்துவிட்டு வந்ததில் பிரச்னை ஏற்பட்டது.
எனவே, தனது மகளின் திருமணத்தில் இது போன்ற சம்பவங்கள் நிகழாமல் இருக்க மன்சுக் ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளார். தனது மகளின் திருமண அழைப்பிதழில் "மது குடித்தவர்கள் யாரும் திருமணத்திற்கு வர வேண்டாம்" என்று அச்சடித்து விநியோகித்துள்ளார்.
இந்த அழைப்பிதழ் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இந்த அழைப்பிதழ் யோசனைக்கு பலரும் பாராட்டி வரும் நிலையில், ஒரு தரப்பினரோ தங்கள் சமூகத்தை மோசமானவர்களாக சித்தரிப்பதாக புகார் தெரிவித்துள்ளனர்.
ஆனால் நாங்கள் எந்த சமூகத்தையும் தவறாக சித்தரிக்கும் நோக்கத்துடன் இப்படி செய்யவில்லை என்று மன்சுக் தரப்பினர் விளக்கம் அளித்துள்ளனர். திருமணத்தில் எந்த சண்டையும் வராமல் நல்ல விதமாக இருக்க வேண்டும் எண்ணத்தில் தான் இவ்வாறு அழைப்பிதழில் குறிப்பிட்டதாக கூறியுள்ளனர்.
newstm.in