1. Home
  2. தமிழ்நாடு

மக்கள் பீதி..!! மேகாலயா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் இன்று மிதமான நிலநடுக்கம்..!!

மக்கள் பீதி..!! மேகாலயா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் இன்று மிதமான நிலநடுக்கம்..!!

இந்தியாவின் வடமாநிலங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து நிலநடுக்கம் உணரப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

இந்த நிலையில் மேகாலயா மாநிலம் தூர நகரில் இருந்து 27 கிலோமீட்டர் தொலைவில் இன்று காலை காலை 9.49 மணிக்கு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பூமிக்கடியில் 25 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4 புள்ளிகளாக பதிவானதாக தேசிய நிலஅதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கியதாக அப்பகுதி மக்கள் கூறினர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த முழுமையான தகவல்கள் வெளியாகவில்லை.

அதேபோல், மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூர் பகுதியில் இன்று திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கோலாப்பூர் பகுதியில் இருந்து 112 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 3.6 ஆக பதிவாகியுள்ளது.


மக்கள் பீதி..!! மேகாலயா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் இன்று மிதமான நிலநடுக்கம்..!!

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த முழுமையான தகவல்கள் வெளியாகவில்லை. திடீர் நிலநடுக்கத்தால் அப்பகுதி மக்கள் பீதியில் உள்ளனர்.


Trending News

Latest News

You May Like