1. Home
  2. தமிழ்நாடு

ஓபிஎஸ் தாயார் மருத்துவமனையில் அனுமதி..!!

ஓபிஎஸ் தாயார் மருத்துவமனையில் அனுமதி..!!

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் நாச்சியார் (96). இவருக்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதை அடுத்து தேனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி பெயர் விஜயலட்சுமி. இவர் சில மாதங்களுக்கு முன்பு திடீரென மரணம் அடைந்தார். இவருக்கு ரவீந்திரநாத் குமார், ஜெயபிரதீப் என்ற இரண்டு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.

ஓபிஎஸ் தாயார் பழனியம்மாள் தேனி பெரிய குளத்தில் வசித்து வருகிறார். பல ஆண்டுகளாகவே உடல் நல குறைவால் அவதிப்பட்டு வரும் பழனியம்மாள், கடந்த மாதம் தேனியிலும், அதற்கு முன் மதுரையில் பிரபல தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு குணமடைந்து வீடு திரும்பி இருக்கிறார். இந்நிலையில் இன்று மீண்டும் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து சர்க்கரை அளவு , ரத்த அழுத்தமும் மிகவும் குறைந்ததால் உடல்நிலை மிகவும் மோசமானதை அடுத்து தேனியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து தகவல் அறிந்த ஓ.பி.எஸ், உடனடியாக போடியில் இருந்து தேனி வந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கபட்டு உள்ள தாயாரை நேரில் பார்த்து விட்டு பின்னர் மருத்துவரிடம் அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார்.இதனையடுத்து பெரியகுளம் சென்ற அவர் தனது தாயார் உடல் நலம் சரியில்லாத காரணத்தால் அவரது உடல் நலம் குறித்து கண்காணிக்க தனது அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்துவிட்டு இங்கேயே தங்க போவதாக தெரிவித்துள்ளார்.


Trending News

Latest News

You May Like