அதிர்ச்சியில் திரையுலகம்!! பிரபல இயக்குநர் வித்யாசாகர் ரெட்டி திடீர் மரணம் !!
ஆந்திரா மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் பிறந்தவர் வித்யாசாகர் ரெட்டி. பின்னர் படிப்பை முடிக்க சென்னை சென்றார். இவர் நரேஷ் மற்றும் விஜயசாந்தி நடிப்பில் கடந்த 1983-ம் ஆண்டு வெளியான ராகாசி லோயா என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான நிலையில் தொடர்ந்து பல வெற்றி படங்களை இயக்கிய முன்னணி இயக்குனராக திகழ்ந்தார்.
அவர் தனது கேரியரில் 35 க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ளார். ஸ்துவர்துபுரம் டொங்காலு சாகரின் கேரியர் பெஸ்ட் படமாக இருந்தாலும், அவர் தாடி , பப்ளிக் ரவுடி , அம்மா டொங்கா , நட்சத்திர போராட்டம் , பாரதசிம்மம் , ஆளு மகளு, அம்மா நா கோடலா , ஜகதேக வீரு , ராமசக்கனோடு , மற்றும் ஆக்ஷன் போன்ற பல குறிப்பிடத்தக்க படங்களை இயக்கினார் .
இந்த நிலையில், உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த இவர் சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். எனினும் அவை பலன்அளிக்காமல் உயிரிழந்தார். மேலும் இவருடைய மறைவு திரையுலக பிரபலங்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் நடிகர் சிரஞ்சீவி உட்பட பல பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
இவரது மறைவுக்கு திரைப்பட தயாரிப்பாளர் ஸ்ரீனு வைட்லா இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “எனது குருவான சாகர் இப்போது இல்லை என்பது மிகவும் வேதனையானது . அவர் தனது உதவியாளர்கள் அனைவரையும் மிகவும் அன்புடன் கவனித்து, மதிப்புமிக்க பல விஷயங்களைக் கற்றுக் கொடுத்தார். அவர் எங்கள் அனைவருக்கும் பெரும் ஆதரவாக இருந்தார். நீங்கள் என்றென்றும் நினைவில் இருப்பீர்கள் ஐயா ஓம் சாந்தி” என்று பதிவிட்டுள்ளார்.