1. Home
  2. தமிழ்நாடு

தமிழ்நாட்டை போல புதுச்சேரியிலும் ஆதார் இணைப்பு கட்டாயம்..!!

தமிழ்நாட்டை போல புதுச்சேரியிலும் ஆதார் இணைப்பு கட்டாயம்..!!

தமிழ்நாட்டில் மின் இணைப்போடு ஆதார் என் கட்டாயமாக்கப்படவேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப் பட்டிருந்தது. கடந்த டிசம்பர் ஜனவரி 31ம் தேதிக்குள் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று மின்வாரியம் உத்தரவிட்டிருந்த நிலையில் அதற்கான காலக்கெடு தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது. மின் இணைப்போடு ஆதார் எண்ணை இணைத்தால் மட்டுமே மின் கட்டணம் செலுத்த முடியும் என்றும் அவ்வாறு இணைக்க தவறிவிட்டால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்றும் மின்வாரியம் எச்சரிக்கை விடுத்தது.

இந்நிலையில், தற்போது புதுச்சேரியிலும் மின் இணைப்போடு ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாக்கப் பட்டிருக்கிறது.

ஆதார் எண் இணைக்க வேண்டும் அல்லது அரசினால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு ஆவணம் ஆதார் எண்ணிற்கு பதிலாக மின் இணைப்போடு இணைக்க படலாம் என்கிற ஒரு வழிமுறையையும் புதுச்சேரி அரசு விதித்திருக்கிறது.

மின் இணைப்பின் மாற்றங்களை ஏற்படுத்துவதற்காக அந்த வழிமுறைகளில் மற்றம் ஏற்படுத்துவதற்காக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.


Trending News

Latest News

You May Like