1. Home
  2. விளையாட்டு

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இருந்து ஸ்ரேயாஸ் ஐயர் திடீர் விலகல்..!

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இருந்து ஸ்ரேயாஸ் ஐயர் திடீர் விலகல்..!

நியூசிலாந்து அணியுடனான தொடரை தொடர்ந்து இந்திய அணி அடுத்ததாக பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடரில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி வரும் 9-ம் தேதி நாக்பூரில் தொடங்க உள்ளது.

இந்த நிலையில், ஸ்ரேயாஸ் ஐயர் முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதுகுப்பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு சென்ற அவர், நியூசிலாந்து தொடரில் இருந்து முற்றிலுமாக விலகினார். அவரின் காயம் சரியாகி முழு உடற்தகுதி பெற இன்னும் 2 வாரங்கள் தேவைப்படும் என்பதால் முதல் டெஸ்டில் இருந்து விலகியுள்ளார்.

உடற்தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே 2வது டெஸ்ட் போட்டியிலும் சேர்க்கப்படுவார். டெஸ்ட் போட்டியில் சிறப்பான ஃபார்மில் இருந்துவரும் ஸ்ரேயாஸ் ஐயர் விலகியிருப்பது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.


ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இருந்து ஸ்ரேயாஸ் ஐயர் திடீர் விலகல்..!

ஸ்ரேயாஸ் ஐயரின் இடத்தை நிரப்புவதற்கு இஷான் கிஷான், சூர்யகுமார் யாதவ், கே.எஸ்.பரத் போன்ற வீரர்கள் அணியில் உள்ளனர். ஆனால் இவர்களில் யாரேனும் ஒருவர் முதல் போட்டியில் சிறப்பாக விளையாடிவிட்டால், அதன்பின்னர் மற்ற போட்டிகளில் ஸ்ரேயாஸ் ஐயரின் இடம் கேள்விக்குறியாகிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.


Trending News

Latest News

You May Like