1. Home
  2. தமிழ்நாடு

காதலியின் மகளை வன்கொடுமை செய்து கொன்ற இளைஞர்!!

காதலியின் மகளை வன்கொடுமை செய்து கொன்ற இளைஞர்!!

காதலியின் 3 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர்.

பெங்களூருவை சேர்ந்த பெண் ஒருவர் கணவரை பிரிந்து தனது 3 வயது பெண் குழந்தையுடன் வசித்து வருகிறார். இவருக்கு ஒரு ஆண்டுக்கு முன்பு 26 வயது இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டது.

நாளடைவில் இருவரின் பழக்கம் காதலாக மாறியது. எனவே பெண்ணும் இளைஞரும் சேர்ந்து வாழத் தொடங்கினர். இந்நிலையில் பெண் வேலைக்கு சென்ற நிலையில், அவரது 3 வயது மகளுடன் இளைஞர் வீட்டில் இருந்துள்ளார்.

அந்த இளைஞர் கஞ்சா போதையில் இருந்ததாக தெரிகிறது. அப்போது அந்த குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ளார். பெண் வீட்டிற்கு திரும்பிய போது குழந்தையை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.


காதலியின் மகளை வன்கொடுமை செய்து கொன்ற இளைஞர்!!

மருத்துமனைக்கு கொண்டு சென்றபோது குழந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். குழந்தையின் உடலில் காயத்திற்கான தடயங்கள் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதனால் சந்தேகம் அடைந்த அப்பெண் இதுகுறித்து அந்த இளைஞரிடம் கேட்டுள்ளார். அதற்கு அந்த இளைஞர் அப்பெண்ணை கடுமையாக தாக்கியுள்ளார். மருத்துவமனையில் இருந்த மருத்துவர்கள் இளைஞரை பிடித்து காவல்துறையினர் ஒப்படைத்தனர்.

விசாரணையில் இளைஞர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். அவரை கைது செய்த காவல்துறையினர் போக்சோ, கொலை குற்றம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

newstm.in

Trending News

Latest News

You May Like