1. Home
  2. தமிழ்நாடு

தாய், தந்தை, காதலியை அடுத்தடுத்து கொலை செய்த சைக்கோ இளைஞர்!!

தாய், தந்தை, காதலியை அடுத்தடுத்து கொலை செய்த சைக்கோ இளைஞர்!!

இளைஞர் ஒருவர் அவரது தாய், தந்தை மற்றும் காதலியை அடுத்தடுத்து கொலை செய்து வீட்டின் தோட்டத்தில் புதைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்க மாநிலம் பாங்குராவை சேர்ந்த சுவேதா என்ற பெண்ணுக்கு சமூக வலைதளம் மூலம் கடந்த 2007ஆம் ஆண்டு உதியன் தாஸ் என்ற நபர் அறிமுகமானார். பின்னர் இருவரும் காதலிக்க தொடங்கியுள்ளனர்.

பின்னர் 2016ஆம் ஆண்டு சுவேதா அமெரிக்கா சொல்வதாக கூறிவிட்டு போபால் நகருக்கு வேலைக்காக சென்றார். பின்னர் உதியன தாஸ் உடன் வாழத் தொடங்கினார். பின்னர் பெண்ணின் வீட்டில் உள்ளவர்களால் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை.

தொலைபேசி எண்ணை வைத்து தேடியதில் போபாலில் இருப்பது தெரியவந்தது. காவல்துறை நடத்திய விசாரணையில் உதியன் தாஸ் சுவேதாவை கொலை செய்து வீட்டின் படுக்கை அறையில் புதைத்து வைத்தது தெரியவந்தது.


தாய், தந்தை, காதலியை அடுத்தடுத்து கொலை செய்த சைக்கோ இளைஞர்!!

தொடர்ந்து விசாரணை நடைபெற்று 600 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு உதியன் தாஸூக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் இதையும் கடந்த ஒரு அதிர்ச்சிகர செய்தி வெளியாகியுள்ளது.

உதியன் தாஸ் நடவடிக்கையை கவனித்து, அவரது பின்புலத்தை அறிந்து, போலீஸார் அவரிடம் மேலும் விசாரணை மேற்கொண்டனர். அதில் அந்த நபர், அவரது தாய், தந்தையை கொலை செய்தது தெரியவந்தது.

அவர்கள் இருவரின் உடலையும் சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் உள்ள தனது வீட்டு தோட்டத்தில் புதைத்ததை அவர் விசாரணையின் போது தெரிவித்தார். கொலைக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

newstm.in

Trending News

Latest News

You May Like