1. Home
  2. தமிழ்நாடு

ரேஷன் கார்டுதாரர்களுக்கு குட் நியூஸ்.. நாளை முதல் எந்த கடையிலும் வாங்கலாம்..!

ரேஷன் கார்டுதாரர்களுக்கு குட் நியூஸ்.. நாளை முதல் எந்த கடையிலும் வாங்கலாம்..!

பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி முடிவடைந்ததால், நாளை முதல் கார்டுதாரர்கள் அத்தியாவசிய உணவுப் பொருட்களை எந்த ரேஷன் கடையிலும் வாங்கிக் கொள்ளலாம்.

ரேஷன் பொருட்களை, கார்டில் உள்ள முகவரிக்கு ஒதுக்கப்பட்ட கடையில் மட்டும் வாங்க முடியும். இதனால், இடம்பெயரும் தொழிலாளர்கள் சிரமப்பட்டனர். இதையடுத்து, கார்டுதாரர்கள் எந்த இடத்திலும் உள்ள ரேஷன் கடையிலும் பொருட்களை வாங்கும் வசதி துவக்கப்பட்டது.


பொங்கலை முன்னிட்டு ரேஷன் கடைகளில் 2.19 கோடி அரிசி கார்டுதாரர்களுக்கு தலா 1,000 ரூபாய் ரொக்கம், ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, கரும்பு ஆகியவை வழங்கப்பட்டன. இந்த பரிசுத் தொகுப்பும், இந்த மாதத்திற்கான பொருட்களும் ரேஷன் கார்டில் உள்ள முகவரிக்கு ஒதுக்கிய கடையில் மட்டும் வழங்கப் பட்டன.

பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி முடிவடைந்து விட்டதால், நாளை (பிப். 1ம் தேதி) முதல், அடுத்த மாத உணவுப் பொருட்கள் வழங்கப்பட உள்ளன. அவற்றை கார்டுதாரர்கள் முகவரிக்கு ஒதுக்கிய கடை மட்டுமின்றி, எந்த ரேஷன் கடையிலும் வாங்கிக் கொள்ளலாம்.

Trending News

Latest News

You May Like