1. Home
  2. தமிழ்நாடு

விபச்சார வழக்கில் அதிமுக மகளிரணி தலைவி கைது..!!

விபச்சார வழக்கில் அதிமுக மகளிரணி தலைவி கைது..!!

விருதுநகர் கொல்லர் தெருவைச் சேர்ந்தவர் சந்திரசேகரன் (42), இவரது மனைவி அமல்ராணி‌. இவர் விருதுநகர் மேற்கு மாவட்ட அ.இ.அ.தி.மு.க. மகளிரணி துணைத்தலைவியாக உள்ளார். தம்பதியினர் விருதுநகர் பேராலி ரோடு ஐடிபிடி காலனியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துள்ளனர்.அந்த வீட்டில் கடந்த சில நாட்களாக விபச்சாரம் நடப்பதாக விருதுநகர் ஊரக காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கிடைத்தது.


விபச்சார வழக்கில் அதிமுக மகளிரணி தலைவி கைது..!!

இதனைத் தொடர்ந்து ஊரக காவல் நிலைய ஆய்வாளர் மாரிமுத்து மற்றும் காவலர்கள் அங்கு சென்று விசாரணை நடத்தினர். அந்த வீட்டில் சிவகாசியைச் சேர்ந்த ஹரிபாலகுமார்(24), மற்றும் சாத்தூர் அருகே மேட்டமலையைச் சேர்ந்த கற்பகவல்லி(29) ஆகியோர் இருந்தனர். அவர்கள் போலீஸ் விசாரணையின் போது முன்னுக்கு பின்னாக பதிலளித்தனர். இதனையடுத்து அவர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அந்த வீட்டில் விபச்சாரத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் விருதுநகர் மேற்கு மாவட்ட அ.இ.அ.தி.மு.க. மகளிரணி துணைத்தலைவி அமல்ராணி மற்றும் அவரது கணவர் சந்திர சேகரன் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Trending News

Latest News

You May Like