1. Home
  2. தமிழ்நாடு

பரபரப்பு! அமைச்சர் மீது திடீர் துப்பாக்கிச்சூடு!!

பரபரப்பு! அமைச்சர் மீது திடீர் துப்பாக்கிச்சூடு!!

ஒடிஷாவில் அமைச்சர் மீது ஒருவர் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிஷாவில் நடைபெற்று வரும் நவீன் பட்நாயக் தலைமையிலான அரசில், நபா தாஸ் என்பவர் சுகாதாரத்துறை அமைச்சராக உள்ளார் அவர், ஜார்சுகுடா மாவட்டம் பிரஜராஜ்நகர் பகுதியில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ளச் சென்றிருந்தார்.

அப்போது அவர் காரை விட்டு இறங்கியதும், அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த உதவி காவல் ஆய்வளர் கோபால் தாஸ் என்பவர் அமைச்சரின் மார்பை குறிவைத்து துப்பாக்கியால் சுட்டார். குண்டடிப்பட்ட அமைச்சர் சரிந்து கீழே விழுந்தார்.


பரபரப்பு! அமைச்சர் மீது திடீர் துப்பாக்கிச்சூடு!!


அப்போது உள்ளூர் காவல்நிலைய ஆய்வாளர் உள்ளிட்ட இருவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து மூவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். துப்பாக்கிச்சூடு நடத்திய கோபால் தாஸ் கைது செய்யப்பட்டுள்ளார்.


பரபரப்பு! அமைச்சர் மீது திடீர் துப்பாக்கிச்சூடு!!

முதலில் மாவட்ட மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு, அமைச்சர் நபா கிஷோர் தாஸ் மேல் சிகிச்சைக்காக புவனேஷ்வருக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரது நிலைமை கவலைக்கிடமாகவே உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.


பரபரப்பு! அமைச்சர் மீது திடீர் துப்பாக்கிச்சூடு!!


சொந்த பகை காரணமாக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என காவல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து கோபால் தாசிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த துப்பாக்கிச் சூட்டிற்கு முதல்வர் நவீன் பட்நாயக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.


newstm.in

Trending News

Latest News

You May Like