தமிழக காவல் துறையின் அலங்கார ஊர்திக்கு முதல் பரிசு..!!
நாட்டின் 74-வது குடியரசு தினம் நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சென்னை மெரினா காமராஜர் சாலையில் சேப்பாக்கம் பகுதியில் உள்ள உழைப்பாளர் சிலை அருகே நடைபெற்ற இந்த விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி, தேசியக் கொடியை ஏற்றி வைத்து, முப்படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். அதை தொடர்ந்து கடலோர காவல் படை,கடற்படை, விமானப்படையின் அலங்கார ஊர்திகள் வலம் வந்தன.
இந்த அணிவகுப்பில், தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் அமைக்கப்பட்டிருந்த தமிழ்நாடு வாழ்க என்று வாசகம் இடம்பெற்றிருந்த வாகனம் முதலில் வந்தது. இதனை பார்வையாளர்கள் உள்ளிட்டோர் கண்டு ரசித்தனர். இந்த வாகனத்தில் தமிழ்நாடு என்ற எழுத்துடன் கூடிய கோலமும் இடம்பெற்றிருந்தது.
இந்நிலையில், இதில் காவல்துறை அலங்கார ஊர்திக்கு முதல் பரிசும், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையின் அலங்கார ஊர்திக்கு இரண்டாம் பரிசும், செய்தி மக்கள் தொடர்பு துறையின் அலங்கார ஊர்திக்கு ( அரசின் திட்டங்கள்) 3 வது பரிசும் அறிவிக்கப்பட்டுள்ளது.