1. Home
  2. தமிழ்நாடு

ஜல்லிக்கட்டு போட்டியில் உயிரிழந்தவர்களுக்கு நிவாரணம்!!

ஜல்லிக்கட்டு போட்டியில் உயிரிழந்தவர்களுக்கு நிவாரணம்!!

ஜல்லிக்கட்டு போட்டியின் போது மாடு முட்டியதால் உயிரிழந்த மூன்று பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், புதுக்கோட்டை மாவட்டம், கே.ராயவரத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் போட்டித் திடலுக்கு வெளியிலிருந்த கணேசன் (58), சிவகங்கை மாவட்டம், சிராவயலில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் போட்டித் திடலுக்கு வெளியிலிருந்த பூமிநாதன் (52) ஆகியோர் மாடு முட்டி உயிரிழந்தனர்.


ஜல்லிக்கட்டு போட்டியில் உயிரிழந்தவர்களுக்கு நிவாரணம்!!


அதே போல் தருமபுரி மாவட்டம், தடங்கத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளை சேகரிக்கும் இடத்தில் நின்றிருந்த கோகுல் (14) ஆகியோரை போட்டியில் பங்குபெற்ற காளைகள் எதிர்பாராத விதமாக முட்டியதால் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர் என்ற துயரச் செய்தியை கேட்டு மிகவும் வேதனையுற்றேன்.


ஜல்லிக்கட்டு போட்டியில் உயிரிழந்தவர்களுக்கு நிவாரணம்!!

இவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன். உயிரிழந்த மூவரின் குடும்பத்தினருக்கும் முதல் அமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூபாய் மூன்று லட்சம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

newstm.in

Trending News

Latest News

You May Like