1. Home
  2. வர்த்தகம்

மீண்டும் உச்சம் தொட்டது தங்கம் விலை.. நகைப்பிரியர்கள் அதிர்ச்சி..!

மீண்டும் உச்சம் தொட்டது தங்கம் விலை.. நகைப்பிரியர்கள் அதிர்ச்சி..!

ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் கிராம் 5,300 ரூபாயைத் தாண்டியுள்ளதால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 35 ரூபாய் உயர்ந்து 5,325 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதே போல தங்கத்தின் விலை சவரனுக்கு 280 ரூபாய் உயர்ந்து 42,600 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 24 கேரட் தங்கத்தின் விலையும் கிராமுக்கு 38 ரூபாய் உயர்ந்து 5,809 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.


தங்கத்தின் விலை அதிகரித்துள்ள அதே நேரத்தில் வெள்ளியின் விலையும் இன்று கிடுகிடுவென உயர்ந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலை இன்று கிராமுக்கு 1 ரூபாய் உயர்ந்து 74.50 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதேபோல ஒரு கிலோ வெள்ளியின் விலை 1000 ரூபாய் உயர்ந்து 74,000 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இதனால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

Trending News

Latest News

You May Like