1. Home
  2. விளையாட்டு

கடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்ற இந்தியா!!

கடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்ற இந்தியா!!

இந்தியா வந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 ஒரு நாள், 3 இருபது ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. அதன்படி முதலாவது ஒரு நாள் போட்டி ஐதராபாத்தில் நேற்று நடைபெற்றது.

டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரர்கள் சுப்மன் கில், ரோகித் சர்மா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ரோகித் சர்மா 34 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த விராட் கோலி 8 ரன்களும் , இஷான் கிஷன் 5 ரன்களும் எடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

மறுபுறம் சுப்மன் கில் நிலைத்து ஆடி ரன்கள் குவித்தார். மறுமுனையில் சூர்யகுமார் யாதவ் 31ரன்களும் , ஹர்திக் பாண்டியா28 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். சிறப்பாக விளையாடிய சுப்மன் கில் இரட்டைசதம் அடித்து அசத்தினார்.




இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 349 ரன்கள் குவித்தது. பின்னர் களமிறங்கிய நியூசிலாந்து அணியில், டெவான் கான்வே 10 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஆலன் 40 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

மைக்கேல் பிரேஸ்வெல் , சாண்ட்னெர் இருவரும் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்டு ரன்கள் குவித்தனர். நிலைத்து ஆடிய இருவரும் அதிரடியாக ரன்கள் குவித்தனர். அதிரடியாக வவிளையாடிய பிரேஸ்வெல் சதம் அடித்து அசத்தினார்.


கடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்ற இந்தியா!!


சாண்ட்னெர் அரைசதம் அடித்தார். பின்னர் அவர் 57ரன்களில் வெளியேறினார். மறுபுறம் பந்துகளை சிக்ஸர் , பவுண்டரிக்கு பறக்க விட்ட பிரேஸ்வெல் வெற்றியை நோக்கி அழைத்து சென்றார். மறுமுனையில் நியூசிலாந்து விக்கெட்டுகளை இழந்தது.

கடைசி ஓவரில் 6 பந்துகளில் வெற்றிக்கு 20 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரை ஷர்துல் தாக்கூர் வீசினார். 3ஆவது பந்தில் எல்.பி. டபிள்யு முறையில், பிரேஸ்வெல் ஆட்டமிழந்தார்.

இதனால் நியூசிலாந்து அணி 49.2 ஓவர்களில் 337 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளை இழந்து ஆட்டமிழந்தது. இதனால் இந்திய 12அணி ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

newstm.in

Trending News

Latest News

You May Like