1. Home
  2. விளையாட்டு

நியூசி.க்கு எதிரான ஆட்டம்... ஷ்ரேயாஸ் ஐயர் விலகல்!....

நியூசி.க்கு எதிரான ஆட்டம்... ஷ்ரேயாஸ் ஐயர் விலகல்!....

நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் இருந்து கிரிக்கெட் வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் விலகினார்.


நியூசிலாந்து கிரிக்கெட் அணி, 3 ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் ஆட்டங்களில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது. முதல் ஒருநாள் போட்டி ஐதராபாத்தில் நாளை நடக்கிறது. இந்நிலையில் காயம் காரணமாக இந்திய அணியின் பேட்ஸ்மேன் ஷ்ரேயாஸ் ஐயர், நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இருந்து விலகி உள்ளார்.


இந்த தகவலை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில், 'முதுகு வலி காரணமாக நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் ஷ்ரேயாஸ் ஐயர் பங்கேற்க மாட்டார். அவர் தேசிய கிரிக்கெட் அகாடமியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவார்.


நியூசி.க்கு எதிரான ஆட்டம்... ஷ்ரேயாஸ் ஐயர் விலகல்!....



ஷ்ரேயாஸ் ஐயருக்கு பதிலாக ரஜத் பட்டிதார் மாற்று வீரராக அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்' என்று கூறப்பட்டுள்ளது. ஷ்ரேயாஸ் ஐயருக்குப் பதில் அணியில் இடம்பிடித்துள்ள பட்டிதார் இன்னும் சர்வதேச போட்டியில் அறிமுகமாகவில்லை. கடந்த டிசம்பர் மாதம் வங்கதேசத்தில் நடந்த ஒருநாள் தொடருக்கான அணியில் பட்டிதார் இடம்பெற்றிருந்தார். ஆனால் அவர் விளையாடவில்லை.

newstm.in

Trending News

Latest News

You May Like