1. Home
  2. தமிழ்நாடு

இது சூப்பர் நியூஸ்..!! ஜல்லிக்கட்டு போட்டியை சென்னையில் நடத்த ம.நீ.ம. திட்டம்..!!

இது சூப்பர் நியூஸ்..!! ஜல்லிக்கட்டு போட்டியை சென்னையில் நடத்த ம.நீ.ம. திட்டம்..!!

டெல்லியில் ராகுல் காந்தியின் நடைபயணத்தில் கமலஹாசன் கலந்து கொண்டார். இதில் தமிழகத்தில் இருந்து மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகள் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். அவர்களை கவுரவப்படுத்த கமல்ஹாசன் முடிவு செய்திருந்தார்.

இதன்படி டெல்லி சென்ற மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் சுமார் 300 பேர் கட்சி அலுவலகத்துக்கு அழைக்கப்பட்டிருந்தனர். அவர்களை பாராட்டி சான்றிதழ் வழங்கிய கமல்ஹாசன் நிர்வாகிகள் மத்தியில் பேசினார்.

மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசு மத அரசியலை செய்து கொண்டிருக்கிறது. மதத்தை அரசியலுக்கான தகுதியாக பயன்படுத்துவதை ஏற்றுக் கொள்ள முடியாது. நாம் இந்த மத அரசியலை தடுத்து நிறுத்த வேண்டும். நாட்டில் ஒற்றுமையை நிலை நாட்ட வேண்டும்.


இது சூப்பர் நியூஸ்..!! ஜல்லிக்கட்டு போட்டியை சென்னையில் நடத்த ம.நீ.ம. திட்டம்..!!



மக்கள் நீதி மய்யம் கட்சியை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல தேவையான நடவடிக்கைகளை நான் எடுத்து வருகிறேன். தமிழர்களின் பாரம்பரியத்தை காப்பதிலும் மக்கள் நீதி மய்யம் தொடர்ந்து உறுதுணையாக இருக்கும். அந்த வகையில் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகளை சென்னையில் நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளோம்.

பொங்கல் பண்டிகையையொட்டி ஜல்லிக்கட்டை நடத்த அனுமதி கேட்டுள்ளோம். இந்த அனுமதி கிடைத்தால் ஜல்லிக்கட்டை நடத்த தயாராக உள்ளோம். மெரினாவில் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த வேண்டும் என்பது எனது விருப்பம்.

இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.

Trending News

Latest News

You May Like