பாஜக பெண் எம்.பி ரீட்டா பகுகுணா ஜோஷிக்கு ஆறு மாத சிறை..!
![1](https://newstm.in/static/c1e/client/106785/uploaded/9263610c938de709a7734c7551285814.png?width=836&height=470&resizemode=4)
கடந்த மக்களவைத் தேர்தலில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் பிரயாக்ராஜ் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் ரீட்டா பகுகுணா ஜோஷி.
இதற்கு முன்னதாக காங்கிரஸ் கட்சியில் இருந்த இவர், கடந்த 2012ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்தின்போது விதிகளை மீறி பிரசாரம் செய்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இவ்வழக்கு குறித்த விசாரணை கடந்த 12 ஆண்டுகளாக நடந்து வந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பில் தீர்ப்பளித்த லக்னோ நீதிமன்றம், பாஜக எம்.பி. ரீட்டா பகுகுணா ஜோஷிக்கு ஆறு மாதச் சிறைத்தண்டனையும் ரூ.1,100 அபராதமும் விதித்து உத்தரவிட்டது.
இந்நிலையில், அவர் பதவி நீக்கம் செய்யப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஏனெனில், ராகுல் காந்திக்குச் சிறைத் தண்டனை உத்தரவு விதிக்கப்பட்டபோது அவரது எம்.பி. பதவியை உடனடியாக பாஜக அரசு ரத்து செய்தது.
தற்போது பாஜக எம்.பி.க்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருப்பதால் அவரையும் பதவி நீக்கம் செய்யுமா பாஜக அரசு என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.