1. Home
  2. தமிழ்நாடு

சென்னையில் துப்பாக்கிச்சூடு!



குடும்பத் தகராறு காரணமாக சென்னையில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அசாருதீன் என்ற இளைஞருக்கும், சையது இப்ராஹிம் என்பவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. தொழிலதிபரான சையது இப்ராஹிம் துப்பாக்கி வைத்துள்ளார். இந்நிலையில் குடும்பத் தகராறு காரணமாக இருவருக்கும் சண்டை ஏற்பட்டது.

ஒரு கட்டத்தில் தகராறு அதிகமாகவே, சையது இப்ராஹிம் தான் வைத்திருந்த துப்பாக்கியால் அசாருதீனை கையில் சுட்டுவிட்டார். கையில் குண்டு காயத்துடன் மயங்கி விழுந்த அசாருதீன் சிகிச்சைக்காக ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

சென்னையில் துப்பாக்கிச்சூடு!

அசாருதீனை சுட்ட சையது இப்ராஹிம் அதனைத் தொடர்ந்து தனது கையிலும் சுட்டுக்கொண்டார். அவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

newstm.in

Trending News

Latest News

You May Like