1. Home
  2. தமிழ்நாடு

பிரபல சீரியல் இயக்குநரின் மனைவி சடலமாக மீட்பு!!

பிரபல சீரியல் இயக்குநரின் மனைவி சடலமாக மீட்பு!!

செவ்வந்தி சீரியல் இயக்குனர் ஓ.என்.ரத்னத்தின் மனைவி அவரது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஓ.என்.ரத்னத்திற்கும், அவரது மனைவி பிரியாவுக்கும் திருமணமாகி பத்து வருடங்கள் ஆகிறது. அவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். சில காரணங்களால் குழந்தைகளை பொள்ளாச்சியில் உள்ள தாத்தா வீட்டிற்கு அனுப்பி வைத்ததாக தெரிகிறது.

ஓ.என். ரத்தினமும் அவரது மனைவியும் சென்னை வீட்டில் வசித்து வந்தனர். இந்நிலையில் நேற்று பிரியா அவரது வீட்டில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நடைபெறுவதற்கு முந்தைய நாள் இருவருக்கும் இடையே சிறிய வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.


பிரபல சீரியல் இயக்குநரின் மனைவி சடலமாக மீட்பு!!

மகன்கள் பொள்ளாச்சியில் இருந்து சென்னை திரும்பினர். அவர்களை அழைத்து வர ரதித்னம் பேருந்து நிலையத்திற்குச் சென்றபோது, பிரியா உயிரை மாய்த்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து பிரியாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. ஓ.என்.ரத்னம், அழகு, வாணி ராணி, செவ்வந்தி, பிரியமான தோழி, பாண்டவர் இல்லம் போன்ற பல வெற்றித் தொடர்களை இயக்கியவர்.

இவரது சொந்த ஊர் பொள்ளாச்சி, மனைவி பிரியாவும் அதே ஊரைச் சேர்ந்தவர். இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

newstm.in

Trending News

Latest News

You May Like