1. Home
  2. விளையாட்டு

தொடர் தோல்வியை சந்திக்கும் பெங்களூரு!!

தொடர் தோல்வியை சந்திக்கும் பெங்களூரு!!

மகளிர் பிரீமியர் லீக் தொடரில் இதுவரை விளையாடிய 5 ஆட்டங்களிலும் பெங்களூரு அணி தோல்வியை தழுவியுள்ளது.

நேற்று டெல்லிக்கு எதிரான போட்டியில், முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 150 ரன்கள் எடுத்திருந்தது. கேப்டன் மந்தனா 15 பந்துகளில் 8 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்.

பெங்களூரு அணி 12.4 ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்து 63 ரன்கள் எடுத்து தடுமாறிக் கொண்டிருந்தது. எலிஸ் பெர்ரியுடன் இணைந்த விக்கெட் கீப்பர் ரிச்சா கோஷ் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.




இருவரும் 4 ஆவது விக்கெட்டிற்கு 74 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்த ஆர்.சி.பி. அணி 150 ரன்களை சேர்த்தது. இதையடுத்து களம் இறங்கிய டெல்லிக்கு தொடக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது.

டெல்லி அணியின் அதிரடி ஆட்டக்காரர் ஷெபாலி வர்மா ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். மற்றொரு ஓபனர் மெக் லேனிங் 15 ரன்னில் வெளியேறினார். இதன்பின்னர் மிடில் ஆர்டர் பேட்டர்கள் ஆலிஸ் கேப்சி 38, ஜெமிமா ரோட்ரிகஸ், மேரிசன் கேப் தலா 32 ரன்கள் எடுத்தனர்.


தொடர் தோல்வியை சந்திக்கும் பெங்களூரு!!


கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடிய ஜெஸ் ஜோனசன் 15 பந்தில் 1 சிக்சர் 4 பவுண்டரியுடன் 29 ரன்கள் எடுத்தார். கடைசி ஓவரில் 9 ரன்கள் எடுக்க வேண்டிய தேவை டெல்லி அணிக்கு ஏற்பட்டது.

முதல் 2 பந்துகளில் தலா 1 ரன் எடுக்கப்பட்டபோது, 3 ஆவது பந்தை ஜோனசன் சிக்சருக்கு அனுப்பினார். 4 ஆவது பந்தில் அவர் பவுண்டரி அடிக்க டெல்லி அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

newstm.in

Trending News

Latest News

You May Like