1. Home
  2. விளையாட்டு

ரஞ்சி கிரிக்கெட்... மும்பை அணி 725 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று உலக சாதனை..!!

ரஞ்சி கிரிக்கெட்... மும்பை அணி 725 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று உலக சாதனை..!!

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி பெங்களூரு மற்றும் அதன் சுற்றுப்புறபகுதியில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் கால் இறுதி ஆட்டம் ஒன்றில் மும்பை அணி, உத்தரகாண்டை சந்தித்தது. முதலில் பேட்டிங் செய்த பிரித்வி ஷா தலைமையிலான மும்பை அணி முதல் இன்னிங்சில் 166.4 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 647 ரன்கள் குவித்து 'டிக்ளேர்' செய்தது. சுவேத் பார்கர் இரட்டை சதம் அடித்து அசத்தினார்.

ரஞ்சி கிரிக்கெட்... மும்பை அணி 725 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று உலக சாதனை..!!

அதை தொடர்ந்து முதல் இன்னிங்க்ஸை ஆடிய உத்தரகாண்ட் அணி 114 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 2-வது இன்னிங்க்ஸை தொடங்கிய மும்பை அணி 3 விக்கெட் இழப்பிற்கு 261 ரன்கள் குவித்து மீண்டும் 'டிக்ளேர்' செய்தது. 795 ரன்கள் என்ற மிக இமாலய இலக்குடன் உத்தரகாண்ட் அணி களமிறங்கி 69 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

இதன் மூலம் மும்பை அணி 725 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதுமட்டுமின்றி முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் மிகப்பெரிய வெற்றி என்ற உலக சாதனையை படைத்துள்ளது.


Trending News

Latest News

You May Like