1. Home
  2. விளையாட்டு

கடைசி 5 பந்தில் ஒரு சிக்ஸர்... ராஜஸ்தான் அணி வெற்றி... !

கடைசி 5 பந்தில் ஒரு சிக்ஸர்... ராஜஸ்தான் அணி வெற்றி... !

கொல்கத்தாவில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஐபிஎல் போட்டியில், ராஜஸ்தான் அணி 177 ரன்களுடன், 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் ஸ்மித் முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து, கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களாக கிறிஸ் லின், சுப்மன் கில் களமிறங்கினர்.

போட்டியின் முதல் ஓவரிலேயே வருண் ஆரோன் வீசிய பந்தில் போல்ட் ஆகி ஆரம்பமே அதிர்ச்சி அளித்தார் கிறிஸ் லின். இதைத் தொடர்ந்து வந்த ரானா, கில் ஜோடி 32 ரன்கள் சேர்த்த நிலையில், கில் 14 ரன்னில் ஆரோன் பந்தில் வெளியேறினார். இவரைத் தொடர்ந்து, ரானா 21, சுனில் நைரன் 11 ரன்னில் அவுட் ஆனார்கள். இந்த தொடரில் அனைத்து போட்டிகளில் அதிரடி காட்டிய ரசுல் 14 ரன்களிலேயே அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். வலது கையில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாகவே ரசுலால் சரியாக ஆட முடியாமல் போனது. பெர்த்வெயிட் 5 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.

ஒரு பக்கம் தனியாளாக நின்று ஆடிய தினேஷ் கார்த்திக் அரைசதம் அடித்தார். அதன் பிறகு ராஜஸ்தான் பவுலர்களின் பந்துவீச்சை நாலாபுறமும் பறக்கவும், தெறிக்கவும் விட்டார். 96 ரன்கள் எடுத்திருந்த தினேஷ் கார்த்திக், ஆட்டத்தின் கடைசி பாலில் பவுண்டரியோ, சிக்ஸரோ அடித்து சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரால் சிங்கிள் மட்டுமே எடுக்க முடிந்தது. 20 ஓவர்களின் முடிவில் கொல்கத்தா அணி 6 விக்கெட்டுகளை இழந்து 175 ரன்கள் சேர்த்து, ராஜஸ்தான் அணிக்கு வெற்றி இலக்காக 176 ரன்களை நிர்ணயித்தது.

பின்னர் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய அஜிங்யா 34 ரன்களுடனும், சன்ஜு சாம்சன் 22 ரன்களுடனம் ஆட்டமிழந்தனர். 10.1 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 78 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது ராஜஸ்தான் அணியினரால். 59 பந்துகளில் 98 ரன்கள் எடுத்தால் தான் வெற்றி என்ற மந்தநிலையில் இருந்தது ராஜஸ்தான்.

18வது ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்களை எடுத்திருந்தது. கடைசி ஒன்பது பந்துகளில் 15 ரன்கள் எடுக்க வேண்டிய இக்கட்டான நிலையில் இருந்தது ராஜஸ்தான். அப்போது ரியானின் சிக்சரால் ஆட்டம் சூடு பிடித்தது. 8 பந்துகளில் 9 ரன்கள் என்ற நிலையில் ஆட்டம் பரபரப்பானது. ஆனால் ரியான் 47 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஆனாலும் கடைசி 5 பந்துகளில் 5 ரன்கள் எடுக்க வேண்டியிருந்தது. ஆர்ச்சரின் அதிரடி சிக்சரால் ராஜஸ்தான் அணி 177 ரன்கள் எடுத்து, 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

newstm.in

Trending News

Latest News

You May Like