1. Home
  2. விளையாட்டு

ராஜஸ்தான் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!!

ராஜஸ்தான் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!!

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இமாச்சலபிரதேசம் தர்மசாலாவில் நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. பஞ்சாப் அணியில் பிரப்சிம்ரன் முதல் ஓவரிலேயே 2 ரன்னிலும், அதர்வா 19 ரன், தவான் 17 ரன், லிவிங்ஸ்டன் 9 ரன் எடுத்து அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.

இதையடுத்து சாம் கரண் மற்றும் ஜித்தேஷ் சர்மா ஜோடி சேர்ந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். இதில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜித்தேஷ் 28 பந்தில் 44 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார்.

அடுத்த களமிறங்கிய ஷாருக்கான் அதிரடி காட்டினார். இறுதியில் பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் எடுத்தது. 188 ரன்கள் என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி பேட்டிங் செய்ய தொடங்கியது.


ராஜஸ்தான் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!!

அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜாஸ் பட்லர் ரன் ஏதுமின்றி அவுட்டாகி வெளியேற, அடுத்து களமிறங்கிய தேவ்தத் படிக்கலுடன் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஜோடி சேர்ந்தார். இவர்களின் பார்ட்னர்ஷிப்பில் அணியின் ரன் வேகம் உயர்ந்தது.

இதில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 36 பந்துகளில் 50 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். தேவ்தத் படிக்கல் 30 பந்துகளில் 51 ரன்கள் குவித்து கேட்ச் ஆகி வெளியேறினார். சஞ்சு சாம்சன் 2 ரன்களிலும், ரியான் பராக் 20 ரன்களிலும் கேட்ச் ஆகி ஆட்டமிழந்தனர்.

மறுபுறம் அதிரடி காட்டிய ஷிம்ரான் ஹெட்மேயர் 4 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் விளாசி 28 பந்துகளில் 46 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இறுதி ஓவரில் வெற்றி பெறுவதற்கு 9 ரன்கள் தேவை என்ற நிலையில், துருவ் ஜுரெல் சிக்ஸர் விளாசி வெற்றி பெற செய்தார்.

newstm.in

Trending News

Latest News

You May Like