1. Home
  2. ஆன்மீகம்

இன்று துர்க்கையை வழிபட எதிர்பார்த்த பதவி உயர்வு கிட்டும்..!

1

சனி மற்றும் ராகு, கேது பெயர்ச்சியின் போதும், ஜாதகரீதியாக சில சிரமங்கள் ஏற்படும்போதும், துர்க்கை வழிபாடு செய்யச் சொல்வார்கள். காரணம் பகைவர்களை வேரறுப்பது,மற்றும் தீவினைகளை போக்குவதில் துர்க்கை வழிபாடு சாலச் சிறந்தது. எந்தெந்த கிழமைகளில் எவ்வாறு துர்க்கை வழிபாடு செய்ய வேண்டும் என்பதைக் காணலாம்.  

ஞாயிறு : ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30-6 மணிக்குள் புதிய வெள்ளைத்துணியில் திரி செய்து, துர்க்கை சன்னிதியில் விளக்கேற்ற வேண்டும். நைவேத்யமாக சர்க்கரை பொங்கல்  செய்ய வேண்டும். இதனால் குடும்பத்தில் வறுமை நீங்கப் பெற்று,செல்வம் வளம் பெருகும். 

திங்கள் : திங்கள்கிழமைகளில் காலை 7.30-9க்குள் துர்க்கைக்கு வெண்ணெய் காப்பு செய்து வெண் பொங்கல் நைவேத்யம் செய்து வழிபட மூட்டு சம்பந்தமான நோய் நீங்கும் என்பதும்,பிள்ளைகளுக்கு வெளிநாட்டில் கல்வி பயில வாய்ப்பு கிட்டும் என்பதும் நம்பிக்கை.

செவ்வாய் : மாலை 3.00-4.30க்குள் ராகு கால நேரத்தில், வடக்கு முகமாக தீபமேற்றி, தக்காளி சாதத்தை  துர்க்கைக்கு  நைவேத்யம் செய்து வழிபட மாங்கல்ய பலமும், குழந்தை பாக்கியமும் கிடைக்கும். 

புதன் : மதியம் 12 முதல் 1.30க்குள் பஞ்சு திரியில் விளக்கேற்றி, புளியோதரை நிவேத்யம் செய்து துர்க்கையை வழிபட,எதிர்பார்த்த பதவி உயர்வு கிட்டுவதுடன், ரத்த சம்பந்தமான நோய் தீரும். 

வியாழன் : மதியம் 1.30-3 மணிக்குள் விளக்கேற்றி, எலும்மிச்சம்பழம் சாதம் நிவேத்யம் செய்து, வழிபட வியாபாரிகளுக்கு செய்யும் தொழிலில் அதிக லாபம் கிட்டும். இதய சம்பந்தமான நோய்கள் நீங்கும்.

வெள்ளி : துர்க்கையை வழிபட மற்ற எல்லா நாட்களையும் விட வெள்ளிக்கிழமைகளில் ராகுகால நேரமான காலை 10.30-12 மணி மிகவும் ஏற்றது. எலுமிச்சம்பழ தீபம் ஏற்றி,தேங்காய் சாதம் அல்லது பாயாசம் நிவேத்யம் செய்ய வேண்டும். இதனால் தீராத துன்பம் தீரும். மாங்கல்ய பலம் பெருகும். 

சனி : வேலை இல்லாமல் அவதிபடுவோர்  காலை 9-10.30க்குள், மஞ்சள்துணி திரியில் விளக்கேற்றி, காய்கறி கலந்த அன்னத்தை நிவேத்யம் செய்து வழிபட,விரும்பிய துறையில் வேலை கிட்டும். சிறுநீரக கோளாறு நீங்கும். 

ஜெய ஜெய தேவி ...ஜெய ஜெய தேவி 

துர்கா தேவி சரணம் 

Trending News

Latest News

You May Like