1. Home
  2. ஆன்மீகம்

இன்று இந்த 21 வகை இலைகளால் விநாயகரை அர்ச்சனை செய்தால் பெரும் செல்வம் மகிழ்ச்சியான வாழ்வு அமையும்..!

1

விநாயகரை 21 வகையான இலைகளைக் கொண்டு அர்ச்சிப்பது சிறந்தது . இதனால் அடையக்கூடிய பலாபலன்கள் பற்றியப் பதிவு இது.விநாயகர் சதுர்த்தி அன்று அருகம்புல், முல்லை இலை, எருக்கம் இலை உள்ளிட்ட  21 வகை இலைகளால் அர்ச்சனை செய்து வணங்கிட பெரும் செல்வம் மகிழ்ச்சியான மங்கல வாழ்வு அமையும்.

1. முல்லை இலை:  அறம் வளரும்

2. கரிசலாங்கண்ணி இலை:  இவ்வாழ்க்கைக்குத் தேவையான பொருள் சேரும்.

3. விஸ்வம் இலை:  இன்பம், ஜவிரும்பியவை அனைத்தும் கிடைக்கும்.

4. அருகம்புல்:  அனைத்து சவுபாக்கியங்களும் கிடைக்கும்.

5. இலந்தை இலை:  கல்வியில் மேன்மையை அடையலாம்.

6. ஊமத்தை இலை:  பெருந்தன்மை கைவரப் பெறும்.

7. வன்னி இலை:  பூவுலக வாழ்விலும், சொர்க்க வாழ்விலும் நன்மைகள் கிடைக்கப் பெறும்.

8. நாயுருவி:  முகப் பொலிவும், அழகும் கூடும்.

9. கண்டங்கத்திரி:  வீரமும், தைரியமும் கிடைக்கப் பெறும்.

10. அரளி இலை:  எந்த முயற்சியிலும் வெற்றி கிடைக்கும்.

11. எருக்கம் இலை:  கருவிலுள்ள சிசுவுக்கு பாதுக்காப்புக் கிடைக்கும்.

12. மருதம் இலை:  மகப்பேறு கிடைக்கும்

13. விஷ்ணுகிராந்தி இலை:  நுண்ணிவு கைவரப் பெறும்.

14. மாதுளை இலை:  பெரும் புகழும் நற்பெயரும் கிடைக்கும்.

15. தேவதாரு இலை:  எதையும் தாங்கும் மனோதைரியம் கிடைக்கும்.

16. மருக்கொழுந்து இலை:  இல்லற சுகம் கிடைக்கப் பெறும்.

17. அரசம் இலை:  உயர் பதவியும், பதவியால் கீர்த்தியும் கிடைக்கும்.

18. ஜாதிமல்லி இலை:  சொந்த வீடு, மனை, பூமி பாக்கியம் கிடைக்கப் பெறும்.

19. தாழம் இலை:  செல்வச் செழிப்புக் கிடைக்கப் பெறும்.

20. அகத்தி இலை:  கடன் தொல்லையிலிருந்து விடுதலை கிடைக்கும்.

21. தவனம் ஜகர்ப்பூரஸ இலை:  நல்ல கணவன்- மனைவி அமையப் பெறும்

21 வகை இலைகள் கிடைக்காவிட்டாலும் மனம் நிறைய விநாயகப் பெருமானை நிலை நிறுத்தி வணங்கிட இடர்கள் நீங்கி இன்பம் பெருகும்.

குறைத் தீர்த்திடும் ஆனைமுகத்தானே போற்றி!

Trending News

Latest News

You May Like