1. Home
  2. ஆன்மீகம்

வாழ்நாளில் ஒருமுறையாவது தரிசிக்க வேண்டிய சிறப்பு மிக்க தலம்..!

1

வடமாநிலத்தில்  வழிபடும் முக்கியத்தலங்களில் வைஷ்ணவி தேவி தலமும் ஒன்று.

கடல் மட்டத்திலிருந்து 5200அடிகள் உயரத்திலும், கத்ராவின் திரிகுடா மலைதொடரின்மேல்1700 மீட்டர் உயரத்தில் அமைந் திருக்கிறது. ஜம்மு காட்ரா நகரிலிருந்து 46 கி.மீட்டர் தொலைவில் குகை கோவிலாக அமைந்துள்ளது. 30 அடி நீளமும் 1.5 மீட்டர் உயரமும் கொண்டது. வைஷ்ணவி தேவியைத் தரிசிக்க ஆண்டுதோறும் 8 மில்லியன் மக்கள் வருகிறார்கள். இது திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலுக்கு அடுத்து அதிகப்படியான எண்ணிக்கையைக் கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சக்தி பீடம் -13  வைஷ்ணவி தேவி

தல வரலாறு:

ஜஸ்துமல் என்னும் தேவி உபசாகருக்கு வைஷ்ணவி தேவியே மகளாக பிறந்தார். அழகும் அறிவும் கொண்டு சிறப்பாக வளர்ந்த வைஷ்ணவிதேவி மங்கைப்பருவம் எய்தினாள். அவளது அழகில் மயங்கிய பைரவன் என்னும் அசுரன் அவளை துரத்துகிறான். அசுரனிடமிருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ள ஓடும் வைஷ்ணவி தேவி குகையில் போய் ஒளிந்துகொண்டாள். அங்கே  அவளுடைய சுய சொரூபம் சக்தி வடிவமாக வெளிப்பட சுரனை குகை வெளியவே அசுரனை வதம் செய்தாள்.

அசுரனை உடல் குகை வாயிலிலும், தலை பைரவகாடி அருகில் உள்ள மலையிலும் போய் விழுந்தது. அசுரன் இறக்கும் தருவாயில் தவறுக்கு வருந்தி தேவியிடம் மன்னிப்பு கேட்டான். அவன் வேண்டுதலுக்கு மனமிறங்கிய தேவி குகைக்கோயிலை நாடி வரும் பக்தர்களின் பாதம் பட்டு நீ முக்தி அடைவாய் என்று வரமளித்தாள். இன்றும் பக்தர்கள் குகை கோயிலை அடைந்து உள்ளே செல்கிறார்கள். திரும்பி வரும்போது பைரவ காடிக்கு சென்று அவனை வழிபட்டு திரும்புகிறார்கள். அன்று வைஷ்ணவி தேவி அசுரனுக்கு அஞ்சி ஒளிந்திருந்த குகையே இன்று வைஷ்ணவி தேவி கோயிலாக விளங்குகிறது.

தல சிறப்பு:

சக்தி பீடம் -13  வைஷ்ணவி தேவி

டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி மாதங்கள் தவிர எஞ்சிய அனைத்து மாதங்களிலும் 24 மணி நேரமும் வைஷ்ணவி மாதாவை தரிசிக்கலாம். இங்கு அம்மன் சிலை வடிவில் இல்லாமல் அரூபமாகஅருள்பாலிக்கிறாள்.மூலஸ்தானத்தில் துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி மூவரும் அருள்பாலிக்கிறார்கள்.

இத்தலத்துக்கு வருபவர்கள் முதலில் ஜம்முவுக்கு வந்து அங்கிருந்து 50 கி.மீ தொலைவில் உள்ள கட்ரா என்னும் சிறிய ஊருக்குள் வரவேண்டும். அங்கு வைஷ்ணவா தேவியைத் தரிசிக்க பதிவு செய்துகொள்ள வேண்டும். குழுவாகவோ தனி நபராகவோ  நமது விவரங்களைக் கொடுத்தால் இலவச தரிசன டிக்கெட்டுகளை அங்கிருக்கும் வைஷ்ணவாதேவி போர்டு வழங்குகிறது. இந்த டிக்கெட்டுகள் இருந்தால் தான் கோயிலுக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

மலைப்பாதையில் நடக்க இயலாதவர்கள் குதிரை அல்லது டோலி மூலமாக அழைத்து செல்லஆட்கள் உண்டு. சிலர் ஹெலி காப்டர் மூலமாகவும் செல்லலாம். பக்தர்கள் ஜெய் மாதா தி என்னும் கோஷத்தோடு மலைப்பாதையில் நடந்து  சென்று தரிசிக்கி றார்கள். பக்தர்களின் களைப்பை போக்கும் வகையில் வழியில் ஜூஸ், காபி கடைகளும், அவசரத்துக்கு உதவ மருந்துக் கடை களும் உண்டு.

அங்கிருந்து முதலில் பாண்கங்கா என்னும் நதியில் நீராட வேண்டும். இது ஸ்ரீ வைஷ்ணவி மாதா தொடுத்த பாணத்தால் உருவான நதி. அங்கிருந்து  சரண்பாதுகா என்னும் இடத்தை அடையலாம். இது வைஷ்ணவா தேவி இளைப்பாறிய இடம். மொத்தம்12 கி.மீ தூரத்தில் முதல் 10 கி.மீ. வரை மட்டுமே ஏற்றத்துடன் இறங்கினாலும் இறுதி 2 கி.மீட்டர் மலையின் இறக்கத்தில் செல்வதாக இருக்கும்.

செல்லும் வழியில் குகை ஒன்று உள்ளது. அந்த குகைக்குள் நுழைந்து அங்குள்ள தேவ கன்னிகை விக்ரகத்தை தரிசித்து பின்னர் பயணத்தைத் தொடரவேண்டும். தேவியை தரிசிப்பதற்கு முக்கால் கிலோமீட்டருக்கு முன்பு  பூஜைக்குரிய பொருள்களை வாங்கி கொள்ளலாம்.

குகைகோயில் சென்றவுடன் கர்ப்பகிரஹம் உள்ளது.  இடதுபுறம் மகாசரஸ்வதியாகவும், வலதுபுறம் துர்க்கை மாகாளியாகவும், நடுவில் மஹாலட்சுமியாகவும் மூன்று தேவியரின் முழு உருவாக வைஷ்ணவாதேவி காட்சி அளிக்கிறாள்.

சக்தி பீடம் -13  வைஷ்ணவி தேவி
 

தல பிரார்த்தனை:

 வைஷ்ணவாதேவியிடம் என்ன வேண்டினாலும் கிடைக்கும் என்று பக்தர்கள் உறுதியாக நம்புகிறார்கள்.தேவியை தரிசித்தபின்பு  பக்தர்களுக்கு பிரசாதமாக நாணயங்களைக் கொடுப்பார்கள். அதைக் கொண்டுவந்து வீட்டில் வைத்தால் எதிரிகள் பயம் விலங்கும். அச்சம் நீங்கும். செல்வம் நிலைக்கும்.

வாழ்நாளில் ஒருமுறையாவது தரிசிக்க வேண்டிய சிறப்பு மிக்க தலம். மனதில் நினைத்தால் வைஷ்ணவி தேவியே உங்களுக்கு வாய்ப்பையும் ஏற்படுத்தி தருவாள்.

Trending News

Latest News

You May Like